/* */

மதுரையில் அசாம் வாலிபரை தாக்கிய 2 சிறுவர்கள் கைது: கிரைம் செய்திகள்..

மதுரையில் அசாம் வாலிபரை தாக்கிய 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

மதுரையில் அசாம் வாலிபரை தாக்கிய 2 சிறுவர்கள் கைது: கிரைம் செய்திகள்..
X

பைல் படம்

அசாம் மாநிலம், சர்க்கார் பகுதியைச் சேர்ந்தவர் ஓம்நாத் (வயது 25). இவர் மதுரை ஹோட்டலில் தண்ணீர் சப்ளை செய்பவராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் ஓம்நாத் சம்பவத்தன்று இரவு காமராஜர் சாலை, பங்கஜம் காலணிக்கு சென்று இருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர், சிகரெட் தரும்படி கேட்டனர். அதற்கு ஓமநாத் மறுத்துள்ளார்.

ஆத்திரம் அடைந்த கும்பல் சரமாரியாக தாக்கியது. இது தொடர்பாக ஓம்நாத், தெப்பக்குளம் போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து நியூ பங்கஜம் காலனி, காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த 2 சிறுவர்களை கைது செய்தனர். இது தவிர தப்பி ஓடிய புதுராமநாதபுரம் ரோடு, தமிழன் தெரு விஷ்வமுருகன் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பார் ஊழியரை கத்தியால் குத்தியவர் கைது

மதுரை கோரிப்பாளையம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 63). இவர் ஜம்புராபுரம் மார்க்கெட்டில் உள்ள பார் ஒன்றில், சப்ளையராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அவர் சம்பவத்தன்று நள்ளிரவு பாரில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர், சிகரெட் புகைத்துள்ளார். இதற்கு பாஸ்கரன் எதிர்ப்பு தெரிவிக்கவே ஆத்திரமடைந்த 2 பேர் கும்பல், கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பி சென்றது.

இது தொடர்பாக தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து கோரிப்பாளையம், நடுத்தெரு ரகுமான் (வயது 25), பாலம் ஸ்டேஷன் ரோடு, ரஹீம் ராஜா மகன் முகமது முஷாரப் கான் (வயது 19) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

சிறுமியை கர்ப்பீமாக்கியவர் கைது

மதுரை பழங்காநத்தம், நேரு நகர் முருகன் மகன் கார்த்தீஸ்வரன் (வயது 23). இவர் அதே பகுதியில் வசிக்கும் சிறுமி ஒருவரை திருமணம் செய்து உள்ளார். இந்த நிலையில் அவர் சிறுமி என்று தெரிந்தும், வலு கட்டாயமாக பாலியல் வல்லுறவு செய்து உள்ளார். இதன் காரணமாக அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தார். இதனை தொடர்ந்து அவருக்கு மதுரை ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்தது. இது தொடர்பாக மதுரை தெற்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்தீஸ்வரனை கைது செய்தனர்.

கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

மதுரை அகிம்சாபுரம் தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 40). இவருக்கு மனைவி கார்த்திகா தேவி உள்ளார். இந்த நிலையில் கோபாலகிருஷ்ணனுக்கு குடிப்பழக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் வேலைக்கு செல்லாமல் சதா நேரமும் குடித்துவிட்டு திரிந்து உள்ளார். எனவே கார்த்திகா தேவி தட்டி கேட்டார். இதன் காரணமாக குடும்பத்தில் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கோபாலகிருஷ்ணன் நேற்று மாலை வீட்டில் இருந்தார். அப்போது அவருக்கு வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டது. எனவே அவர் வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அப்போது அவரை உறவினர்கள் மீட்டு, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் டாக்டர்களின் சிகிச்சை பலன் இன்றி, கோபாலகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக செல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி உயிரிழப்பு

மதுரை சிம்மக்கல், முத்து இருளப்பன் சந்து பகுதியைச் சேர்ந்தவர் அருண் பாண்டி (வயது 27). இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அவர் யாகப்பா நகர், பாண்டியன் தெருவில் உள்ள சங்கரன் (வயது 56) என்பவரை வீட்டில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தார். அப்போது அருண்பாண்டியை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்டவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இருந்தபோதிலும் வழியிலேயே, அருண்பாண்டி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக அண்ணா நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சித்திரை திருவிழாவில் பிக்பாக்கெட் அடித்தவர் கைது

தஞ்சாவூர், பாலாஜி நகரை சேர்ந்தவர் செந்தில் தேவன் (வயது 37). இவர் சித்திரை திருவிழா பார்ப்பதற்காக மதுரை வந்திருந்தார். இந்த நிலையில் செந்தில் தேவன் சம்பவத்தன்று நள்ளிரவு, யானைக்ககல் பாலம் பகுதியில் நின்று கொண்டு இருந்தார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்திக் கொண்டு, ஒரு வாலிபர் செந்தில் தேவனிடம் செல்போன், பவர் பேங்க், ப்ளூடூத் ஆகியவற்றை அபேஸ் செய்து தப்பிச் சென்றார். அப்போது செந்தில் தேவன் கூச்சல் போடவே, அக்கம் பக்கத்தினர் சுற்றி வளைத்து பிடித்து விளக்குத்தாண் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசாரின் விசாரணையில் அவர் செல்லூர், மேல தோப்பு பகுதியைச் சேர்ந்த 18 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். மதுரை சுண்ணாம்பு காளவாசலை சேர்ந்தவர் பால்பாண்டி (வயது 43). இவர் சம்பவத்தன்று அதிகாலை எம்.கே.புரம் பகுதியில் நடந்து சென்றார். அப்போது சத்துணவு கூடம் ரோட்டில், 3 பேர் கும்பல் கத்தி முனையில் வழிமறித்து, 10 ஆயிரம் ரூபாயை பறித்து சென்றது. இது தொடர்பாக ஜெய்ஹிந்த்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 8 May 2023 12:04 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  2. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் வனப்பகுதியில் இரவில் 108 ஆம்புலன்சில் பிரசவம்
  8. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் 29ம் தேதி வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம்
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே கோவிலில் வெள்ளிக் குடம் திருடியவர் கைது
  10. திருவண்ணாமலை
    வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயில் அழகிப் போட்டி