/* */

திருச்சி அருகே விவசாய நிலத்தில் மதுக்கடை அமைக்க நீதிமன்றம் தடை

திருச்சி அருகே விவசாய நிலத்தில் டாஸ்மாக் மதுபானக் கடை அமைக்க தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

HIGHLIGHTS

திருச்சி அருகே விவசாய நிலத்தில் மதுக்கடை அமைக்க நீதிமன்றம் தடை
X

சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டத்தில் உள்ள நடுவலூர் கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், விவசாயத்தை மட்டுமே முழுமையாக நம்பி இருக்கும் நடவலூர் கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருவதாகவும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் செல்லும் பிரதான சாலையில், விவசாய நிலத்தில் புதிதாக மதுபான கடையை திறக்க டாஸ்மாக் நிறுவனம் திட்டமிட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

விவசாய நிலத்தில் டாஸ்மாக் கடையை திறந்தால், காலி மது பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விவசாய நிலத்தில் கொட்டப்பட வாய்ப்பு உள்ளதால், அருகில் உள்ள விவசாய நிலங்கள் பாதித்து, விவசாயம் செய்ய முடியாத சூழல் ஏற்படும் என்றும் பன்னீர்செல்வம் மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும், புதிய டாஸ்மாக் மதுபான கடை அமைய இருக்கும் இடம் அருகே அரசு பள்ளி மற்றும் கோயில் உள்ளதால், மாணவர்கள் மற்றும் பக்தர்கள் இயல்பாக செல்ல இயலாத சூழல் ஏற்படும் என்றும், கோயில் மற்றும் பள்ளி அருகே டாஸ்மாக் கடை அமைக்க கூடாது என விதிகள் வகுக்கப்பட்டு உள்ள நிலையில், விவசாய நிலத்தில் டாஸ்மாக் கடை அமைக்க கூடாது என வலியுறுத்தி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும் மனுவில் பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, விவசாய நிலத்தில் டாஸ்மாக் மதுபானக் கடை அமைக்க தடை விதிக்க வேண்டும் என பன்னீர்செல்வம் மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, விவசாய நிலத்தில் மதுபான கடைகள் அமைக்க கூடாது என விதிகள் வகுக்கப்பட்டு உள்ளதால், மனுதாரர் குறிப்பிடும் இடத்தில் மதுபான கடையை அமைக்க கூடாது என தடை உத்தரவு பிறப்பித்து வழக்கை முடிந்து வைத்தனர்.

Updated On: 18 March 2023 12:24 PM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  2. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  3. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  5. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!
  6. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  7. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  8. வீடியோ
    🔴LIVE : திருவள்ளூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை வாக்கு...
  9. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  10. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!