/* */

சூளகிரி அருகே அனுமதியின்றி எருது விடும் விழா: 746 பேர் மீது போலீசார் வழக்கு

சூளகிரி அருகே அனுமதியின்றிஎருது விடும் விழா நடத்தியதாக 746 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

HIGHLIGHTS

சூளகிரி  அருகே அனுமதியின்றி எருது விடும் விழா: 746 பேர் மீது போலீசார் வழக்கு
X

சென்னப்பள்ளி கிராமத்தில் நடைப்பெற்ற எருதுவிடும் விழா.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே அனுமதியின்றி நடைப்பெற்ற எருதுவிடும் விழாவில் கலந்துகொண்டு விழா குழுவினர் உள்பட 746 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார்.

சூளகிரி அருகே உள்ள சென்னப்பள்ளி கிராமத்தில் மாட்டுப்பொங்கலை ஒட்டி நேற்று அனுமதி இல்லாமல் கொரோன விதிமுறைகள் கடைபிகாமால் எருதுவிடும் விழா நடைப்பெற்றது.

ஓசூர் எம்எல்ஏ பிரகாஷ் எருதுவிடும் விழாவினை தொடக்கி வைத்தார். விழா ஏற்பாட்டினை ஊராட்சி மன்றத் தலைவர் செல்வம் செய்திருந்தார்.

சூளகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 400க்கும் அதிகமான காளை மாடுகள் அலங்கரித்து வரப்பட்டு வாடி வாசலில் ஒவ்வொன்றாக அவிழ்ந்து விடப்பட்டன.

கட்டுக்கடங்காத இளைஞர்களுக்கு மத்தியில் கொம்புகளில் வண்ண தடுக்கைகளை கட்டிக்கொண்ட காளை மாடுகள் சீறி பாய்ந்தன.

நேருக்குநேர் வந்த காளைகளை அடக்க இளைஞர்கள் போட்டிப்போட்டுக்கொண்டு அடக்கினர்.

காளைகள் முட்டியதில் 10க்கும் மேற்ப்பட்ட பார்வையாளர்கள் காயமடைந்தனர். இந்த மாபெரும் எருதுவிடும் விழாவில் 4000த்திற்கும் அதிகமானோர் பங்கேற்றிருந்தனர். இதையடுத்து தடையை மீறி அதிகமாக கூட்டம் சேர்த்தது, தடையை மீறி திருவிழா நடத்தியது என இரண்டு பிரிவின் கீழ் விழா குழுவினர் உள்பட்ட 746 பேர் மீது சூளகிரி போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 28 Jan 2022 4:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  2. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை
  3. வீடியோ
    🔴LIVE : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல்...
  4. சினிமா
    இளையராஜாவாக எப்படி நடிக்கப்போகிறேன்? தனுஷ் பெருமிதம்..!
  5. அரசியல்
    தேர்தல் பிரசாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா..!
  6. வீடியோ
    🔴LIVE | பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பு...
  7. அரசியல்
    7 ஆண்டுகளாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத மயிலாடுதுறை காங்கிரஸ்...
  8. திருச்சிராப்பள்ளி
    திருச்சி தொகுதியில் 38 வேட்புமனுக்கள் ஏற்பு, 10 வேட்புமனுக்கள்...
  9. தேனி
    தமிழகத்தில் பாமக எவ்வளவு வலுவாக உள்ளது?
  10. தமிழ்நாடு
    எதிர்க்கட்சிகளை குறி பார்த்து அடிக்கும் பாஜக: அரசியல் விமர்சகர்கள்