/* */

சீரான குடிநீர் கேட்டு உதவி மின்பொறியாளர் அலுவலகம் முற்றுகை

வி.மாதேப்பள்ளி கிராம மக்கள் இரண்டு வருடமாக சீரான குடிநீர் இல்லாததால் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகை.

HIGHLIGHTS

சீரான குடிநீர் கேட்டு உதவி மின்பொறியாளர் அலுவலகம் முற்றுகை
X

வி.மாதேப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சீரான குடிநீர் இல்லாததால் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள வி.மாதேப்பள்ளி அடுத்த சையத் நகர் பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் 2 வருடங்களாக சீரான குடிநீர் வசதி செய்து தரவில்லை எனக்கூறி உதவி மின் பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், சையத் நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த பகுதியில் மூன்றுக்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளது.

ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்க வேண்டுமானால் மும்முனை மின்சாரம் தேவைப்படுவதாகவும், மும்முனை மின்சாரம் இல்லாத காரணத்தினால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்களுக்கு குடிக்க தண்ணீர் கிடைப்பதில்லை எனவும், தினமும் டிராக்டர் மூலமாக பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து தண்ணீர் வாங்குவதாகவும், எனவே மும்முனை மின்சார இணைப்பு தரக்கோரி பல முறை வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு செய்ததாகவும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் குடிதண்ணீர் இல்லாததால் தாங்கள் எந்தவித வேலையும் செய்ய முடியவில்லை என பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து இன்று வி. மாதேப்பள்ளி உதவி மின் பொறியாளர் அலுவலகத்தை காலி குடங்களுடன் வந்து முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 24 Aug 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து
  2. கும்மிடிப்பூண்டி
    ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள்...
  3. தென்காசி
    அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  5. இராஜபாளையம்
    திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் தமிழக அமைச்சர் பிரச்சாரம்
  6. கோவை மாநகர்
    40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் : கோவையில் பேசிய கனிமொழி...
  7. வீடியோ
    🔴LIVE : வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜ் ஆதரித்து பாஜக மாநில தலைவர்...
  8. கவுண்டம்பாளையம்
    பாஜக பொய் செய்திகளை பரப்பி வருகிறது : கனிமொழி குற்றச்சாட்டு
  9. சிங்காநல்லூர்
    தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றுவோம் : பிரேமலதா...
  10. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...