/* */

குடிபோதையில் எலி மருந்தை குடித்த முன்னாள் ராணுவ வீரர் பலி

மகாராஜகடை அருகே குடிபோதையில் எலி மருந்தை குடித்த முன்னாள் ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

குடிபோதையில் எலி மருந்தை குடித்த முன்னாள் ராணுவ வீரர் பலி
X

பைல் படம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜகடை அடுத்த காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன். 69 வயது முதியவரான இவர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. வழக்கம் போல் கடந்த 14ஆம் தேதி காட்டூர் கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் மது அருந்தி விட்டு போதை தலைக்கேறிய நிலையில் வீட்டில் இருந்த எலி மருந்தை குடித்துள்ளார். இவரை சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் புஷ்பராஜ் கொடுத்த புகாரின் பேரில் மகாராஜகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா இன்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Updated On: 24 Aug 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
  2. கிணத்துக்கடவு
    கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்
  3. வணிகம்
    வியாபாரத்தில் தரமும் நம்பிக்கையும் இரண்டு கண்கள்..!
  4. நாமக்கல்
    கேரளாவில் பறவைக்காய்ச்சல் உறுதி : நாமக்கல் கோழிப்பண்ணைகளில்...
  5. திருவண்ணாமலை
    வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    குடும்பம் என்பது நம் வாழ்வில் முக்கிய அங்கம்: மேற்கோள்கள்..
  7. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளின் சூப்பர் ஹீரோ தாத்தாக்களே..!
  8. நாமக்கல்
    சித்திரை மாத முதல் சனிக்கிழமை: ஆஞ்சநேயருக்கு சிறப்பு முத்தங்கி...
  9. நாமக்கல்
    தேர்தலில் அனைவரும் ஓட்டுப்போடுவதை கட்டாயமாக்க வேண்டும்: கொமதேக...
  10. லைஃப்ஸ்டைல்
    உண்மை உறவுகளுக்குள் ஊடலும் இருக்கும்..!?