Begin typing your search above and press return to search.
சூளகிரி அருகே எருதுவிடும் விழா: இளைஞர்கள் காளைகளை அடக்க போட்டாப்போட்டி
சூளகிரி அருகே நடைபெற்ற எருதுவிடும் விழாவில் காளைகளை இளைஞர்கள் போட்டிப் போட்டுக்கொண்டு அடக்கினர்.
HIGHLIGHTS
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள திருமலகவுனிக்கோட்டா கிராமத்தில் மாட்டுப்பொங்கலை ஒட்டி இன்று மாபெரும் எருதுவிடும் விழா நடைப்பெற்றது.
சூளகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 400க்கும் அதிகமான காளை மாடுகள் அலங்கரித்துவரப்பட்டு வாடி வாசலில் ஒவ்வொன்றாக அவிழ்ந்து விடப்பட்டன.
கட்டுக்கடங்காத இளைஞர்களுக்கு மத்தியில் கொம்புகளில் வண்ண தடுக்கைகளை கட்டிக்கொண்ட காளை மாடுகள் சீறி பாய்ந்தன.
நேருக்குநேர் வந்த காளைகளை இளைஞர்கள் போட்டிப்போட்டுக்கொண்டு அடக்கினர்.
இதில் காளைகள் முட்டியதில் 10க்கும் மேற்ப்பட்ட பார்வையாளர்கள் காயமடைந்தனர். இந்த மாபெரும் எருதுவிடும் விழாவில் 4000த்திற்கும் அதிகமானோர் பங்கேற்றிருந்தனர்.