/* */

பாலேகுளி ஏரியிலிருந்து 28 ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பு: விவசாயிகள் பங்கேற்பு

கிருஷ்ணகிரி பாலேகுளி ஏரியில் இருந்து 28 ஏரிகளுக்கு தண்ணீர் திறந்துவிடும் நிகழ்ச்சியில் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

HIGHLIGHTS

பாலேகுளி ஏரியிலிருந்து 28 ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பு: விவசாயிகள் பங்கேற்பு
X

பாலேகுளி ஏரியில் இருந்து தண்ணீரை திறந்து விடும் விவசாயிகள் மற்றும் பொதுப்பணித்துறையினர்.

கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் கடந்த 12ம் தேதி 50 அடியை எட்டியது. வடகிழக்கு பருவமழை பெய்ய உள்ளதால், விரைவில் அணை முழு கொள்ளளவை எட்டும் நிலை உள்ளது. எனவே அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறப்பதற்கு முன்பு, கால்வாய் மூலம் ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்ப வேண்டும் என கே.ஆர்.பி., அணை உபரிநீர் நீடிப்பு இடதுபுற கால்வாய் பயன்பெறுவோர் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து இன்று பாலேகுளி முதல் சந்தூர் வரை உள்ள 28 ஏரிகளுக்கு, பாலேகுளி ஏரியில் இருந்து கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பாரூர் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் முருகேசன், சங்கத் தலைவர் சிவகுரு, விவசாயிகள் இளங்கோவன், ராமமூர்த்தி, தனவேல், சக்தி, பழனி, உதயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னாதாக 28 ஏரி கால்வாய்களை அந்தந்த பகுதி விவசாயிகள் தங்கள் சொந்த செலவில் தூர்வாரி சுத்தம் செய்தனர். மேலும் கடந்த 2013ம் ஆண்டு முதல் அணை கால்வாய் மூலம் இந்த 28 ஏரிகளுக்கு திறந்து விட்டபோதிலும், ஒரு ஆண்டு கூட 28 ஏரிகளும் முழுமையாக நிரம்பவில்லை. எனவே, ஏரி நிரம்பும் வகையில் கால்வாயை அகலமும், ஆழமும் படுத்தி கொடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 14 Sep 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?