/* */

ஊத்தங்கரை அருகே 21 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

ஊத்தங்கரை அருகே 21 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

HIGHLIGHTS

ஊத்தங்கரை அருகே 21 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராயம் நிரம்பிய 600 கேன்கள்.

விழுப்புரம் மத்திய புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் புயல் பாலச்சந்திரன் தலைமையிலான போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், பெங்களூரில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி சென்ற சரக்கு லாரியை கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மிட்டப்பள்ளி அருகே தடுத்து நிறுத்தி, சோதனை மேற்கொண்டனர்.

அப்போது டாரஸ் லாரி முழுவதும் தனித்தனியாக பெட்டிகளில், பார்சல் செய்யப்பட்ட 35 லிட்டர் அளவு கொண்ட 600 கேன்களில், 21 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பிடிபட்டது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் பாலேந்திரசிங்(33). என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மத்திய புலனாய்வுப் பிரிவு எஸ்.பி. சுப்புலட்சுமி நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். விசாரணைக்குப் பின் ஓசூர் கலால் பிரிவு டிஎஸ்பி சிவலிங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டு இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 25 Nov 2021 3:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?