Begin typing your search above and press return to search.
சிப்காட்டில் இருசக்கர வாகனம் திருடிய மூன்று பேர் கைது
சிப்காட்டில் இருசக்கர வாகனம் திருடியதாக மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
கிருஷ்ணகிரி மாவட்டம், சிப்காட் காவல் நிலைய பகுதியில் பார்த்திபன் என்பவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தை 17.08.2022 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு தான் குடியிருக்கும் வீட்டின் முன்பு நிறுத்தியுள்ளார். மறுநாள் 18.08.2022 ஆம் தேதி காலை 06.00 மணிக்கு எழுந்து வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் காணவில்லை.
இதனையடுத்து அக்கம் பக்கம் இருந்தவர்களிடம் விசாரித்தும் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து பார்த்திபன் சிப்காட் காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்து விசாரணை செய்த சிப்காட் போலீசார் இருசக்கர வாகனம் திருடிய மூன்று பேரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.