Begin typing your search above and press return to search.
தேன்கனிக்கோட்டையில் ரவுடி கொலை: நீதிமன்றத்தில் இருவர் சரண்
தேன்கனிக்கோட்டையில் ரவுடி கொலை வழக்கில் இருவா் நீதிமன்றத்தில் சரணடைந்தனா்.
HIGHLIGHTS
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை அடுத்த அஞ்செட்டி அருகே உள்ள தக்கட்டியைச் சோ்ந்த சுரேஷ் (33), மீது கொலை, வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.
கடந்த 20-ஆம் தேதி இரவு மாரச்சந்திரத்தில் நடந்த ஐயப்பன் கோயில் ஏலச்சீட்டின் போது, சுரேஷுக்கும், மாரச்சந்திரத்தைச் சோ்ந்த ரவுடி மகேஷ்குமாா் (34) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் சுரேஷ் வெட்டிக்கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில், மகேஷ்குமாா், தேன்கனிக்கோட்டை தோ்ப்பேட்டையைச் சோ்ந்த சிவா (32) ஆகியோா் ஒசூா் விரைவு நீதிமன்றத்தில் சரணடைந்தனா். அவா்களை தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய போலீஸாா், நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனா்.