/* */

விநாயகர் ஆலயத்தில் உடைத்த ஒரு தேங்காயில் இரண்டு தேங்காய்: பக்தர்கள் ஆச்சரியம்

ஞான சக்தி விநாயகர் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடடின் போது உடைத்த ஒரு தேங்காயில் இரண்டு தேங்காய்கள் இருந்ததை கண்டு பக்தர்கள் ஆச்சரியம்.

HIGHLIGHTS

விநாயகர் ஆலயத்தில் உடைத்த ஒரு தேங்காயில் இரண்டு தேங்காய்: பக்தர்கள் ஆச்சரியம்
X

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஞான சக்தி விநாயகர் ஆலயத்தில் இன்று நடைபெற்ற சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டின்போது இறைவனுக்கு உடைக்கப்பட்ட தேங்காய் ஒன்றில் இரண்டு தேங்காய்கள் இருந்தது கண்டு பக்தர்கள் ஆச்சரியத்துடன் வணங்கி சென்றனர்.

ஒவ்வொரு பவுர்ணமி முடிந்தும் நான்காவது நாள் சதுர்த்தி தினமாகும். விநாயகப் பெருமானுக்கு உகந்ததாக கூறப்படும் சதுர்த்தி தினத்தன்று வாழ்க்கையில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஏற்படும் இன்னல்களை களைய, சங்கடஹர சதுர்த்தி வழிபாடுகள் நடத்தி விநாயகப்பெருமானை வணங்குவது வழக்கம்.

அதன்படி கார்த்திகை மாதம் செவ்வாய்க்கிழமையில் அமையப் பெற்றுள்ள சங்கடஹர சதுர்த்தி தினம் விசேஷமானதாக கருதி விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஓசூர் காமராஜர் நகர் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஞான சக்தி விநாயகர் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடுகள் நடைபெற்றன. முன்னதாக கணபதி ஹோமம் நடத்தப்பட்டு மூலவர் சுவாமி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. இதைத்தொடர்ந்து இறைவன் தங்கக் கவசம் அணிந்து சொர்ண அலங்காரத்தில் காட்சியளித்தார்.

அப்போது நடைபெற்ற வழிபாட்டில் விநாயகருக்கு நிவேதனமாக உடைத்த ஒரு தேங்காயில் 2 தேங்காய்கள் உருவாகி உள்ளதை கண்ட பக்தர்கள் ஆச்சர்யம் அடைந்தனர். பின்னர் நடைபெற்ற ஆராதனைகளை ஏராளமான பக்தர்கள் பங்கேற்று விநாயகரை வணங்கிச் சென்றனர்.

Updated On: 24 Nov 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    சித்தோடு ஸ்ரீ வாசவி கல்லூரியில் 57-வது ஆண்டு விழா கொண்டாட்டம்
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 100 சதவீத வாக்குபதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு...
  3. உத்திரமேரூர்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 15 வேட்பு மனுக்கள் ஏற்பு
  4. காஞ்சிபுரம்
    சின்னம் பெறுவதில் சில கட்சிகளுக்கு சிக்கல் ஏன்? ஜி.கே. வாசன் விளக்கம்
  5. டாக்டர் சார்
    கோடையை குளிர்விக்கும் சப்ஜா..! சத்துகளின் .களஞ்சியம்.!
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை லோக்சபா தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு
  7. செய்யாறு
    செய்யாறு அருகே கல்குவாரிகள் மீது நடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலை
  8. நாமக்கல்
    மோகனூர் சோதனைச் சாவடியில் தேர்தல் போலீஸ் பார்வையாளர் திடீர் ஆய்வு
  9. நாமக்கல்
    லோக்சபா தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு...
  10. ஆன்மீகம்
    பிறப்பு ஜாதகம் எப்படி எழுதறாங்க தெரியுமா..?