/* */

வெளிமாநில மதுபாக்கெட்டுகள் பறிமுதல்: ஒருவர் கைது

ஓசூர் அருகே காரில் கடத்திய 816 மதுபாக்கெட்டுகள் போலீசார் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனர்.

HIGHLIGHTS

வெளிமாநில மதுபாக்கெட்டுகள் பறிமுதல்: ஒருவர் கைது
X

பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்.

ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை கால்நடை பண்ணை பகுதியில் நேற்று மத்திகிரி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து ஓசூர் நோக்கி மின்னல் வேகத்தில் வந்த காரை நிறுத்துமாறு சைகை செய்தனர். போலீசாரை கண்டதும் காரை அப்படியே நிறுத்திவிட்டு அதிலிருந்து இரண்டு பேர் கீழே இறங்கி ஓட்டம் பிடித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரில் இருந்த ஒருவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். இதில் அவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் காரில் கர்நாடக மாநில மதுபான பாக்கெட்டுகளை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து காரில் நடத்திய சோதனையில் 17 பெட்டிகளில் 816 மதுபான பாக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அதனை கைப்பற்றிய போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து காரும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பி ஓடிய கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நூருல்லா, மாலிக் ஆகியோர் மீது போலீசார் இன்று வழக்கு பதிவு செய்தி தொடர்ந்து தேடி வருகின்றனர்.

Updated On: 30 Aug 2021 3:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  8. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  9. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ரத்த தான முகாம்