/* */

ஒசூர்- ஐஎன்டியூசி சார்பில் இலங்கை அகதி முகாமில் கிருமி நாசினி தெளிப்பு

ஓசூர் கெலவரப்பள்ளி அணைப்பகுதியில் உள்ள இலங்கை அகதி முகாமில், ஐஎன்டியூசி சார்பில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.

HIGHLIGHTS

ஒசூர்- ஐஎன்டியூசி சார்பில் இலங்கை அகதி முகாமில் கிருமி நாசினி தெளிப்பு
X

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், கெலவரப்பள்ளி அணைப்பகுதி இலங்கை அகதிகள் முகாமில், கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.  

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், கெலவரப்பள்ளி அணைப்பகுதியில் 200 க்கும் அதிகமான இலங்கை தமிழர்கள் குடும்பத்தை சேர்ந்த, 650 நபர்கள் இந்த முகாமில் வசித்து வருகின்றனர். கடந்த வாரம் இந்த முகாமில் 30 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் இந்த முகாமில் உள்ளவர்கள் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 32 நபர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்கள் ஒசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதையடுத்து, ஐஎன்டியூசி தொழில் சங்கம் சார்பில், அகதிகள் முகாம் பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி, அகில இந்தியச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான மனோரன் தலைமையில் நடைபெற்றது. கிருமி நாசினி தெளிக்கும் பணியை துவக்கி வைத்த ஒசூர் வருவாய் கோட்டாட்சியர் குணசேகரன், ஒசூரில் கொரோனா தொற்று குறைந்து வருவதாவும், பொதுமக்கள் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று, கேட்டுக் கொண்டார்.

ஒசூர் வட்டாட்சியர் செந்தில்குமார், வி.எஸ்.டி. டிராக்டர்ஸ் மனித வளத்துறை அதிகாரி சுரேஷ், மிண்டா நிறுவன மனித வளத்துறை தலைவர் அலோக்குமார், தொழிலதிபர் சின்ராஜ், கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசமூர்த்தி, முத்தாலி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மாரி தென்னல், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 8 Jun 2021 12:42 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்