/* */

ஓசூர் சோதனைச்சாவடியில் 217 லிட்டர் மதுபாட்டில்கள், கார் பறிமுதல்: ஒருவர் கைது

ஓசூர் அடுத்த ஜூஜுவாடி சோதனைச்சாவடியில் 217 லிட்டர் கர்நாடக மதுபாட்டில்கள், இன்னோவா காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

ஓசூர் சோதனைச்சாவடியில் 217 லிட்டர் மதுபாட்டில்கள், கார் பறிமுதல்: ஒருவர் கைது
X

மதுபாட்டில்களை கடத்தி வந்த ராஜா.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் உதவி காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவின்பேரில், சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் காவல் உதவி ஆய்வாளர் மஞ்சுநாதன் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் காளியப்பன் தலைமை காவலர் குணசீலன் ஆகியோர் நேற்று இரவு ஜூஜூவாடி போலீஸ் சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது திருப்பத்தூர் மாவட்டம், நாட்ரம்பள்ளி அருகே பனந்தோப்பு கிராமத்தை சேர்ந்த சின்னப்பன் என்பவரது மகன் ராஜா என்பவர் கர்நாடகா மாநிலத்திலிருந்து கர்நாடக மாநில மதுபானங்களை தன்னுடைய இன்னோவா காரில் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, அவரை கையும் களவுமாக பிடித்து அவரிடமிருந்து இன்னோவா கார் மற்றும் 67 ஆயிரத்து 503 ரூபாய் மதிப்பிலான சுமார் 217 லிட்டர் கர்நாடக மதுபானங்ளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வர்கின்றனர்.

Updated On: 24 Sep 2021 2:45 AM GMT

Related News

Latest News

  1. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  2. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  3. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  5. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  6. வீடியோ
    🔴LIVE : திருவள்ளூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை வாக்கு...
  7. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  8. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
  9. குமாரபாளையம்
    சக்திமயில் இன்ஸ்டிடியூட் சார்பில் தேசிய தடுப்பூசி தின நிகழ்வு
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’