/* */

பர்கூர் பாலமுருகன் கோவிலில் மரக்கன்றுகள் நடும் விழா: எம்எல்ஏ., தொடங்கி வைப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பாலமுருகன் கோவிலில் மரக்கன்றுகள் நடும் விழாவை மதியழகன் எம்எல்ஏ., தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

பர்கூர்  பாலமுருகன் கோவிலில் மரக்கன்றுகள் நடும் விழா: எம்எல்ஏ., தொடங்கி வைப்பு
X

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பாலமுருகன் கோவிலில் மரக்கன்றுகள் நடும் விழாவை துவக்கி வைத்த மதியழகன் எம்எல்ஏ.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் சொந்தமான காலி இடங்களில் கலைஞர் தலமரக் கன்றுகள் நடும் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது.

அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் இருந்து ஜெகதேவி செல்லும் சாலையில் உள்ள ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் இன்று மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. இந்த விழாவிற்கு இந்து சமய அறநிலையத்துறை இணை இயக்குநர் கஜேந்திரன் தலைமை வகித்தார்.

கோவில் மலையில் உள்ள காலி இடத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியை பர்கூர் எம்எல்ஏ., மதியழகன் தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், கலைஞர் தலமரக் கன்றுகள் நடவு செய்யும் திட்டத்தின் கீழ், கோவில் காலி இடங்களில் வேப்பமரம், கடம்பம், ஆத்தி, நாவல், பாதம், அரசமரம் உள்ளிட்ட தலமரக் கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. மரக்கன்றுகள் நன்கு பராமரித்து வளர்க்க வேண்டும் என்றார்.

இணை இயக்குநர் கூறும் போது, கிருஷ்ணகிரி, திருவண்ணமலை மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே 20 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. தற்போது 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்படும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் நாகராஜ், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், பேரூர் செயலாளர் பாலன், இளங்கோ, இந்து சமய அறநிலையத்துறை பர்கூர் சரக ஆய்வாளர் அண்ணாதுரை, செயல் அலுவலர் கிருஷ்ணன், கோவில் பூசாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 24 Sep 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    எடப்பாடிக்கே துரோகம் செய்த நிர்வாகிகள் | எதிர்பார்க்காத அதிமுக தலைமை |...
  2. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  3. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  4. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  5. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  6. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  7. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  8. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  9. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    வெயிலில் வாடிய பெண்களுக்கு வழங்கப்பட்ட குடை மற்றும் தண்ணீர் பாட்டில்