/* */

பர்கூர் அருகே கல்பாரம் ஏற்றிச்சென்ற வேன் கவிழ்ந்து விபத்து: 4 பேர் படுகாயம்

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே கல்பாரம் ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்ததில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

HIGHLIGHTS

பர்கூர் அருகே கல்பாரம் ஏற்றிச்சென்ற வேன் கவிழ்ந்து விபத்து: 4 பேர் படுகாயம்
X

விபத்துக்குள்ளான மினி வேன்.

கிருஷ்ணகிரி பெத்ததாளப்பள்ளியில் இருந்து கருங்கற்களை ஏற்றிக் கொண்டு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடிக்கு இன்று வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த வேன் பர்கூரை அடுத்த அத்திமரத்துப்பள்ளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி எதிரில் சென்று கொண்டிருந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் மோதி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் அந்த வேனில் பயணம் செய்த கிருஷ்ணகிரி அடுத்த பாஞ்சாலியூர் பகுதியை சேர்ந்த பிரகாஷ், அருள், சீனி, பிரபு ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பர்கூர் போலீசார் அங்கு சென்று விபத்துக்குள்ளான வாகனத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 16 Sep 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?