/* */

கோடநாடு வழக்கு விசாரணை: தினேஷ் தங்கையிடம் விசாரணை

எனது மகனுக்கு எந்த பக்கத்தில் இருந்தும் அழுத்தம் வரவில்லை என தற்கொலை செய்து கொண்ட தினேஷ்குமார் தந்தை போஜன் பேட்டி.

HIGHLIGHTS

கோடநாடு வழக்கு விசாரணை: தினேஷ் தங்கையிடம் விசாரணை
X

தற்கொலை செய்து கொண்ட தினேஷின் தந்தை.

கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு சம்பந்தமாக ஏ.டி.எஸ்.பி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . இந்நிலையில கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 3 ம் தேதி தற்கொலை செய்து கொண்ட கோடநாடு எஸ்டேட் கணிணி ஆப்ரேட்டராக பணி புரிந்த தினேஷ்குமார் குடும்பத்தினரிடம் தனிப்படை போலீசார் கடந்த 2 நாட்களாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று தினேஷ்குமார் தந்தை போஜன் மற்றும் அவரது மனைவி கண்ணகியிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். இன்று தினேஷின் தங்கை ராதிகாவிடம் டி.எஸ்.பி சந்திரசேகர் தலைமையில் தனிப்படை போலீசார் காலை 11.30 மணி முதல் மதியம் 2.17 மணி வரை விசாரணை நடத்தினர். விசாரனைக்கு பிறகு தினேஷின் தந்தை பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:

தினேஷ் வீட்டில் தான் தற்கொலை செய்து கொண்டார். அன்று நான் பக்கத்து கிராமத்தில் சாவு ஒன்றுக்கு சென்றிருந்தேன். அப்போது மகன் மயக்க முற்றிருப்பதாக தகவல் தெரிவித்தனர். நான் அங்கிருந்து வருவதற்குள் மருத்துவமனைக்கு கொண்டு சென்று விட்டனர் அதை தான் போலீசாரிடம் தெரிவித்தேன் . நான் அன்று என்ன தெரிவித்தேனோ, அதைதான் இன்றும் தெரிவித்தேன். யாரிடம் இருந்து அவருக்கு எந்த வித அழுத்தமும் இல்லை. கோடநாடு எஸ்டேட்டிலிருந்தோ, நண்பர்களிடமிருந்தோ எந்தவித அழுத்தம் தரப்படவில்லை, அவருக்கு என்ன மன உளைச்சல் என்று எனக்கு தெரியாது. எப்போதும் இருப்பதுபோல்தான் இருந்தான். ஏன தற்கொலை செய்தார் என தெரியவில்லை. பிரேதப்பரிசோதனையில் உள்ள கையெழுத்து உங்களுடையதுதானா என விசாரித்தனர்.

நான் எழுதிக் கொடுத்தார்கள் கையெழுத்து போட்டேன் என்றேன் நேற்று என்னையும் என் மனைவியையும் விசாரணை செய்தனர் இன்று மகளை விசாரணை செய்தனர். மறுபடியும் விசாரிப்பதால், யார் வந்த கேட்டாலும் இதைதான் சொல்லுவோம் என அவர் கூறினார்.

Updated On: 21 Sep 2021 11:42 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    தத்துவம் பேசும் வித்தகன் ஆகலாமா..?
  2. இந்தியா
    துப்பாக்கியுடன் கிராமத்தில் புகுந்து தேர்தலை புறக்கணிக்க கூறிய...
  3. லைஃப்ஸ்டைல்
    காதல், சர்வதேச பொதுமொழி..! ஆயினும் அது புதுமொழி..!
  4. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!
  5. ஈரோடு
    ஈரோடு திமுக வேட்பாளர், தமிழக முதல்வர் சந்திப்பு!
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் பாரம்பரிய ஆபரணங்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    முகம் பிரகாசமாக மின்னுவதற்கான இயற்கை வழிகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  8. நாமக்கல்
    கோடைக்காலத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்: 30ம் தேதி இலவச...
  9. நாமக்கல்
    வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் அன்று சம்பளத்துடன் விடுமுறை ..!
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?