/* */

சிறு வணிகர்களுக்கு அபராதம் விதிப்பதை நிறுத்த கரூர் வர்த்தகர்கள் கோரிக்கை

சோதனைக் கொள்முதலின் போது சிறு வணிகர்களுக்கு அபராதம் விதிப்பதை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என கரூர் வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

HIGHLIGHTS

சிறு வணிகர்களுக்கு அபராதம் விதிப்பதை நிறுத்த கரூர் வர்த்தகர்கள் கோரிக்கை
X

மாவட்ட வணிகவரித்துறை துணை ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்த கரூர் மாவட்ட அனைத்து வணிகர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர்

வணிக வரித் துறையினரால் கடந்த மார்ச் மாதம் சில்லறை வணிகக் கடைகளில் சோதனைக் கொள்முதல் என்ற பெயரில் ஆய்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

இது, நவ.6ஆம்தேதி முதல் அமல்படுத்தப்பட்டு சில்லறை வணிக கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்யும்போது, பில் கொடுக்காமல் பொருள்கள் வழங்கப்பட்டால் உடனடியாக வணிகர்களுக்கு அபராதமாக ரூ.20 ஆயிரம் விதிக்கப்பட்டது.

கரூர் மாவட்டத்திலும் இது போன்ற ஆய்வுகள் நடைபெறுவதால், அதிருப்தியடைந்த கரூர் மாவட்ட அனைத்து வணிகர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாவட்ட தலைவர் ராஜூ, செயலாளர் வெங்கட்ராமன் தலைமையில் மாவட்ட வணிகவரித்துறை துணை ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: வணிகவரித்துறையினால் கடந்த மார்ச் மாதத்தில் சில்லறை கடைகளில் ஆய்வு செய்வது சம்பந்தமாகவும், டெஸ்ட் பர்ச்சேஸ் செய்வது (சோதனை கொள்முதல்) சம்பந்தமாகவும் அறிவிப்புகள் வெளியானபோதே தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தமிழக அனைத்து வணிகர்களின் சார்பாக தனது கருத்துக்களையும், எதிர்ப்பையும் பதிவு செய்திருந்தது.

மீண்டும் டெஸ்ட் பர்ச்சேஸ் சம்பந்தமான வணிகவரித்துறையின் அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதன் அடிப்படையில் வணிகவரித்துறை அதிகாரிகள் சில்லறை வணிகம் செய்யும் வணிகர்களிடம் பொருட்கள் வாங்கி அதை டெஸ்ட் பர்ச்சேஸ் என குறிப்பிட்டு அதற்கு அபராதமாக ரூ.20 ஆயிரம் வரை வசூலிப்பதாகவும் புகார்கள் வந்து கொண்டிருக்கிறது.

அனைத்து சில்லறை கடைக்காரர்களும் தங்கள் கடைக்கு பொருட்களை வாங்கும்போது அதற்கான வரி செலுத்தியே பொருட்களை வாங்கி, அதை பொதுமக்களுக்கு விற்பனை செய்கிறார்கள். பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் அப்பொருட்களுக்கு ஏற்கனவே வரி செலுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் வணிகவரித்துறை அதிகாரிகள், சில்லறை கடைகளில் டெஸ்ட் பர்ச்சேஸ் என்ற பெயரில் பொருட்களை வாங்கி, அதற்கு ரசீது அளிக்கப்படவில்லை என்று கூறி அபராதம் விதிக்கும் முறை ஏற்புடையது அல்ல. இது சில்லறை சிறு, குறு வணிகர்களின் வாழ்வாதாரத்தையே பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

வரி ஏய்ப்பு செய்கிறவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றகருத்துக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு எதிரானது அல்ல. குறிப்பாக வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் பொருட்களையும், அவற்றை கொண்டு வருகின்ற நிறுவனங்களையும் ஆய்வு செய்தால் மட்டுமே வரி ஏய்ப்பு முழுமையாக தடுக்கப்படும்.

எனவே வரி ஏய்ப்பில் ஈடுபடுகின்ற உற்பத்தியாளர்கள், தயாரிப்பாளர்கள், கனரக வாகன உரிமையாளர்கள் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுத்து வரி ஏய்ப்பை முழுமையாக தடுக்க ஆவண செய்திட வேண்டும். அதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு துணை நிற்கும். சில்லறை சிறு, குறு வணிகர்கள் பாதிக்காத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே 6 மாதங்கள் டெஸ்ட் பர்ச்சேஸ் நடைமுறையை நிறுத்திவைத்து, வணிகர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அதன்பிறகு படிப்படியாக செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Updated On: 30 Nov 2022 6:34 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  2. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  4. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  5. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  6. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்
  9. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
  10. ஆன்மீகம்
    பொறுமை! நம்பிக்கை: இது சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்