/* */

குளித்தலை அருகே இடிதாக்கி பெண் உயிரிழப்பு

குளித்தலை அருகே வயலுக்கு சென்ற பெண் மீது இடி தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

HIGHLIGHTS

குளித்தலை அருகே இடிதாக்கி பெண் உயிரிழப்பு
X

இடிதாக்கியதில் உயிரிழந்த பெண்.

குளித்தலை அருகே வடக்கு மாடுவிழுந்தான் பாறையை சேர்ந்த பொன்னாம்பலம் என்பவரின் மனைவி வள்ளி (50). இவர் கூலி தொழிலாளி, இவர்களுக்கு முருகன் (34), ரமேஷ் ( 25 ) என்ற 2 மகன்களும் தேவி என்ற 1 மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக குளித்தலை பகுதி முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் அவ்வப்போது சாரல் மழை மற்றும் கனமழை பெய்து வருகின்றது. இந்தநிலையில் கூலி தொழிலாளி வள்ளி நெல் பயிர்களுக்கு களை எடுக்கும் வேலைக்கு சென்று விட்டு மாலை நேரத்தில் ஆடுகளுக்கு இழை பறிக்க வயல் வெளிக்கு நடந்து சென்றுள்ளார்.

அப்போது திடீரென்று பயங்கர சத்தத்துடம் இடி வள்ளியை தாக்கியுள்ளது. இதில் தலை மற்றும் உடலில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, தெற்கு நங்கவரம் கிராம நிர்வாக அலுவலர் ராஜலிங்கம் அளித்த புகாரின் பேரில் குளித்தலை காவல் நிலையப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 2 Nov 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  2. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  3. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  5. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!
  6. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  7. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  8. வீடியோ
    🔴LIVE : திருவள்ளூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை வாக்கு...
  9. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  10. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!