/* */

சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

கைது செய்யப்பட்ட ராகுல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கரூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

HIGHLIGHTS

சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது
X

பைல் படம்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள மேட்டுமருதூர் பகுதியை சேர்ந்தவர் திருமால் மகன் ராகுல் என்கின்ற ஹரிஹரன் (வயது 23). இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் இவர் 17 வயதான சிறுமி ஒருவரை கடத்தி சென்று இருக்கலாம் என சந்தேகத்தின் பெயரில் அச்சிறுமியின் பெற்றோர் குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இதுகுறித்து குளித்தலை போலீசார் சிறுமி மாயம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ராகுல் சிறுமியை கடத்தி சென்றது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. மேலும் சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்ததும் விசாரணையில் உறுதியானது. இதையடுத்து சிறுமியின் மாயமான வழக்கு பிரிவை மாற்றி குழந்தை திருமண தடுப்பு சட்டம் மற்றும் போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் ராகுலை குளித்தலை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராகுல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கரூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

Updated On: 22 Jan 2022 3:30 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?