/* */

கரூரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

சேலம் மாவட்ட கூட்டுறவு சங்கத் தலைவர் இளங்கோவனின் சகோதரி இந்திராணியின் கரூர் வீட்டில் சோதனை நடைபெற்றது.

HIGHLIGHTS

கரூரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
X

கரூரில் இந்திராணியின் வீட்டில் சோதனை நடத்தும் லஞ்ச ஒழிப்பு போலீசார்.

சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு சங்க தலைவராக இருப்பவர் இளங்கோவன்.இவர் சேலத்தின் முக்கிய பகுதியில் மாளிகை போல் பிரமாண்டமாக வீடு ஒன்று கட்டி வருகிறார். இதற்கு ஆதாரம் என்ன என்று கேள்வி எழுந்தது. இதனையடுத்து சேலத்தில் உள்ள இவருடைய வீடு, உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதில், இளங்கோவனின் சகோதரி இந்திராணி என்பவர் கரூர் மாவட்டம் லாலாபேட்டை அருகேயுள்ள கள்ளபள்ளியில் வசித்து வருகிறார். இங்கும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் இளங்கோவனின் சகோதரி இந்திராணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். லஞ்ச ஒழிப்பு போலீசார் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இளங்கோவன் மீது வழக்கு பதிந்தனர். இதனடிப்படையில் இளங்கோவன் மற்றுப் அவரது உறவினர்கள் வீடுகளில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Updated On: 22 Oct 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்