கரூரில் ஆடவர், மகளிருக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டி

கரூர் மாவட்டத்திற்கு அரசு வேளாண்மை கல்லூரி, புதிய பேருந்து நிலையம் காமராஜர் வணிக வளாகம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
கரூரில் ஆடவர், மகளிருக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டி
X

கரூரில் நடைபெற்ற அகில இந்திய கூடைப்பந்து போட்டியை தொடக்கி வைத்த அமைச்சர் செந்தில்பாலாஜி

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர் மைதானத்தில் 63 ஆம் ஆண்டு ஆண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டி ஒன்பதாம் ஆண்டு பெண்களுக்கான அகில இந்திய கூடைபந்து போட்டி கடந்த 22 ஆம் தேதி துவங்கி ஆறு நாட்கள் நடைபெற்றது.

இதில் இந்தியன் கடற்படை அணி லோனா வில்லா திருவனந்தபுரம் கேரளா மின்சார வாரிய அணி , புதுடெல்லி இந்தியன் ரயில்வே அணி, பஞ்சாப் போலீஸ் அணி , புதுடெல்லி இந்திய விமானப்படை அணி உள்ளிட்ட தலைசிறந்த எட்டு அணிகளும் பெண்கள் பிரிவில் ஐந்து அணிகளும் கலந்து கொண்டனர்.

இதில் ஆண்களுக்கான இந்தப் போட்டி லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெறும் பெண்களுக்கான போட்டி லீக் முறையில் நடைபெற்றது இன்று நடைபெற்ற டெல்லி ஏர் போர்ஸ் அணி சென்னை இந்தியன் வங்கி அணி மோதியதில் 52 க்கு 56 என்ற புள்ளி கணக்கில் சென்னை இந்தியன் வங்கி அணி சேம்பியன் பட்டத்தை வென்றது வெற்றி பெற்ற வீரர்களுக்கு முதல் பரிசு ஒரு லட்ச ரூபாயும் சுழல் கோப்பையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

பெண்களுக்கான இறுதி போட்டியில் கொல்கத்தா ஈஸ்டர்ன் ரயில்வே அணி சாம்பியன் பட்டத்தை வென்றது அவர்களுக்கு 50 ஆயிரம் ரொக்க பணமும் சூழல் கோப்பை வழங்கப்பட்டது முன்னதாக இரு அணி வீரர்களையும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வாழ்த்து தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில்: கரூர் திருவள்ளூர் விளையாட்டு மைதானத்தில் விரைவில் ஆறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் மிக பிரம்மாண்டமான நூலகம் அமைய இருக்கிறது. கரூர் மாவட்டம் என்று சொன்னால் வளர்ச்சி பாதை என்ற நிலைக்கு முதலமைச்சர் பல்வேறு சிறப்பு திட்டங்களை வழங்கி உள்ளார். குறிப்பாக ஆட்சி பொறுப்பு ஏற்று இரண்டு ஆண்டுகளில், கரூர் மாவட்டத்திற்கு அரசு வேளாண்மை கல்லூரி, புதிய பேருந்து நிலையம் காமராஜர் வணிக வளாகம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.கரூர் மாவட்டத்தில் விமான நிலையம் அமைப்பதற்கான பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றார்.

Updated On: 28 May 2023 1:15 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    mavattam in tamilnadu தமிழக மாவட்டங்களின் சிறப்பு பற்றி தெரியுமா...
  2. ஈரோடு
    காஞ்சிக்கோவில், மயிலம்பாடி அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
  3. லைஃப்ஸ்டைல்
    Mulam in tamil-'சாண் ஏறுனா முழம் சறுக்குது' இதில் முழம் என்பது என்ன?...
  4. இந்தியா
    ரயில் விபத்துகளில் உயிரிழந்தோரின் நிவாரணத்தொகை உயர்வு
  5. தமிழ்நாடு
    இறக்கும் முன் உடல் உறுப்பு தானம் செய்தால் அரசு மரியாதை:முதல்வர் ...
  6. தர்மபுரி
    ஒகேனக்கல்லில் நீர்வரத்து 6 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
  7. ஈரோடு மாநகரம்
    சப்பாத்தியில் பூச்சி, ஈரோட்டில் உணவகம் மூடல்
  8. ஈரோடு மாநகரம்
    கனி மார்க்கெட்டில் தற்காலிக ஜவுளி கடைகள் அமைக்கும் பணி தொடக்கம்
  9. விளையாட்டு
    Suryakumar yadav blazes against australia in first odi-காத்திருந்து...
  10. சங்கரன்கோவில்
    கரிவலம் வந்த நல்லூர் அரசு ஆரம்ப பள்ளியை தரம் உயர்த்திய பள்ளி...