/* */

தாய் அடித்து கொலை: தப்பியோடிய மகனுக்கு போலீசார் வலை

பாலவிடுதி அருகே குடும்ப பிரச்னையில் தாயை கொன்றுவிட்டு தப்பியோடிய மகனை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

தாய் அடித்து கொலை: தப்பியோடிய மகனுக்கு போலீசார் வலை
X

பைல் படம்.

கரூர் மாவட்டம் கடவூர் அருகே பாலவிடுதி காவல் சரகத்திற்கு உட்பட்ட கிழக்கு அய்யம்பாளையம் தெற்கு பள்ளத்தில் பாப்பாத்தி என்ற மூதாட்டி வசித்து வந்தார். பாப்பாத்திக்கு, பழனியம்மாள், தங்கமணி ஆகிய மகள்களும் முருகன், காமராஜ், கேசவன் ஆகிய மகன்களும் உள்ளனர். சகோதர, சகோதரிகள் 4 பேருக்கும் திருமணமாகிவிட , கடைசி மகன் கேசவனுடன் பாப்பாத்தி வசித்து வந்தார். கேசவனுக்கு திருமணம் ஆகவில்லை.

இந்நிலையில், தனது தாயிடம் சொத்து, குறித்தும் திருமணம் செய்து வைக்கவில்லை என தகராறு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது ஆத்திரமடைந்த கேசவன் பாப்பாத்தியை அடித்து கொன்றுவிட்டு தப்பியோடிவிட்டார். தகவலறிந்த பாலவிடுதி ஆவல் நிலையப் போலீசார் பாப்பாத்தி சடலத்தை கைப்பற்றி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக உள்ள கேசவனை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 17 Dec 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி