/* */

கரூரில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது

கரூர் மாவட்டத்தில், கொரோனா தடுப்பூசி செலுத்தும் இடங்களில் கூச்சல், குழப்பத்தை தவிர்க்க முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இன்று தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது.

HIGHLIGHTS

கரூரில்  கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது
X

 கரூரில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள முகாம் வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட்டு அமரவைக்கப்பட்டுள்ள பொதுமக்கள்.

கரூர் மாவட்டத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட தடுப்பூசி செலுத்தும் பணி, நேற்று தொடங்கி நடைபெறுகிறது. தடுப்பூசி செலுத்துவதற்கு டோக்கன் வழங்ப்ப்பட்டு அதனடிப்படையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

பலருக்கும் டோக்கன கிடைக்கவில்லை என குற்றம் சாட்டினர். தடுப்பூசி செலுத்தும் இடங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் கூடி, கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. பல இடங்களில் போலீசார் தலையிட்டு சமாதானப்படுத்தி வந்தனர்.

இன்று தடுப்பூசி முகாம் கரூர் நகராட்சிக்குட்பட்ட பசுபதீஸ்வரர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோவிந்தம் பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம்,குளித்தலை நகர ஆரம்ப சுகாதார நிலையம் என 14 மையங்களில் 4,800 தடுப்பூசி போடும் பணி துவங்கியது.

தடுப்பூசி போடுவதற்கு பெண்கள்,ஆண்கள் என காலை முதலே ஏராளமானோர் குவிந்தனர்,பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்றாலும் முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், ஒதுக்கப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப முகாமுக்குள் அனுமதிக்கப்பட்டு அமரவைத்து தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.இதனால் தேவையற்ற குழப்பம் இல்லாமல் இன்று பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

Updated On: 13 Jun 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    அறிவை விளைவிக்கும் எழுத்து வயல், புத்தகங்கள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை ஏன் அவசியம்..?
  3. ஈரோடு
    ஈரோட்டில் நிழல் சண்டை செயல் முறையில் அசத்திய கராத்தே வீரர்,...
  4. சினிமா
    டைட்டானிக், அவதார் சாதனைகளை முறியடிக்கும் கில்லி...! என்னண்ணே...
  5. வீடியோ
    தலைக்கேறிய கஞ்சா போதை வாகன ஓட்டி மீது தாக்குதல் !#drugaddiction...
  6. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில் தேரோட்டம்
  7. காஞ்சிபுரம்
    தேர்தல் ஆணையம் தனது கடைமையை ஒழுங்காக செய்யவில்லை - கடம்பூர் ராஜு
  8. தொழில்நுட்பம்
    இஸ்ரேலிய பாதுகாப்புத்துறை ஒப்பந்த எதிர்ப்பு :ஊழியர்கள் பணி
  9. காஞ்சிபுரம்
    ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன்...
  10. குமாரபாளையம்
    மாவட்ட நீதிபதியை கண்டித்து வழக்கறிஞர்கள் சங்க கண்டன ஆர்ப்பாட்டம்