/* */

கிருஷ்ணராயபுரம் பகுதியில் நெல்நடவுப் பணிகள் தீவிரம்

மேட்டூர் அணையில் நீர் இருப்பு குறைந்து வரும் நிலையில் குறுவை நெல்நடவுப்பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்

HIGHLIGHTS

கிருஷ்ணராயபுரம் பகுதியில் நெல்நடவுப் பணிகள் தீவிரம்
X

 கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் குறுவை பயிர் சாகுபடி செய்ய நாற்று நடவு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் குறுவை பயிர் சாகுபடி செய்ய நாற்று நடவு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது.

கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் கடந்த 2 ஆண்டுகளாக சாகுபடிக்கு தேவையான தண்ணீர் முழுமையாக கிடைத்ததால் சுமார் 8 ஏக்கர் வரை நெல் சாகுபடி நடந்தது. இந்த ஆண்டு மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 -ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டாலும், வாய்க்கால்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக காலதாமதமாக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனை அடுத்து கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் ஆடி 18 அன்று விதை நெல்களை வாங்கி தெளித்து நாற்றுவிடும் பணிகளை விவசாயிகள் மேற்கொண்டனர்.

நாற்றுவிட்டு ஒரு மாதம் ஆன நிலையில் நாற்றுகளை பிடுங்கி வயல்களில் நடவு செய்யும் பணிகளை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தில் போதியளவு மழையில்லாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 69 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 14 ஆயிரம் அனஅடி தண்ணீர் வருகிறது. அதே அளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டத்தை நம்பி விவசாயிகள் குறுவை சாகுபடி செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர். நாற்றுவிட்டு 120 நாட்களுக்கு தண்ணீர் வேண்டும். தற்போதுள்ள நிலையில், குறுவை பயிர் சாகுபடிவரை தண்ணீர் வர வாய்ப்பு குறைவு என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அதே வேளையில், நாற்றுவிட்டு பயிர் சாகுபடி செய்தாலும், கரூர் மாவட்டத்தில் கிடைக்கும் மழையை நம்பி ஒரு போக சாகுபடியை எடுத்துவிடலாம் என தன்னம்பிக்கையுடன் சில விவசாயிகள் சாகுபடி பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைவாக உள்ளதால் இந்த ஆண்டு கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் சாகுபடி பரப்பளவு குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.

Updated On: 1 Sep 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?