Begin typing your search above and press return to search.
கரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை
கரூரில் இன்று மாலை மாவட்டம் முழுவதும் பெய்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
HIGHLIGHTS
காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கரூரில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இன்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதையடுத்து, மழை பெய்ய ஆரம்பித்தது. சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக கரூர் நகரம், தாந்தோன்றிமலை, கிருஷ்ணராயபுரம், வெள்ளியணை, வெங்கமேடு, பசுபதிபாளையம், காந்திகிராமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மிதமான அளவில் மழை பெய்தது. பொதுமக்கள் குடை பிடித்தபடி சென்றனர். மாலை நேரத்தில் திடீரென பெய்ய துவங்கிய மழையின் காரணமாக அலுவலக பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.