/* */

ஆன்லைன் மருந்து வணிகம் தடை: மருந்தாளுநர்கள் கோரிக்கை

உலக மருந்தாளுநர் தின நிகழ்வில், ஆன்லைன் மருந்து வணிகத்தை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

HIGHLIGHTS

ஆன்லைன் மருந்து வணிகம் தடை:  மருந்தாளுநர்கள் கோரிக்கை
X

உலக மருந்தாளுநர் தின விழாவில் கலந்து கொண்ட மருந்தாளுநர்கள்.

உலக மருந்தாளுனர்கள் தினத்தையொட்டி கரூரில் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் மற்றும் கரூர் மாவட்ட மருந்தாளுநர்கள் அமைப்பினர் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மருந்தாளுநர்கள் பலர் கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு முன்னாள் மாவட்டத் தலைவர் மேலை பழனியப்பன் தலைமை வகித்தார். மேலும் செயற்குழு உறுப்பினர்கள் வள்ளியப்பன், கார்த்திகேயன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், கிராமப்புறங்களில் பொதுமக்களின் நலன் கருதி நடத்தப்படுகின்ற முதலுதவி சிகிச்சை மையத்தில் ஆலோசகர்களாக மருந்தாளுநர்களை பணியமர்த்தி உரிய மதிப்பூதியம் வழங்க வேண்டும். மருந்தாளுநர்களின் படிப்புக்கு ஏற்றார்போல் அவர்களுக்கு உயரிய வழிகாட்டுதல்களை அரசு வழங்க வேண்டும். அரசு பணியில் இல்லாத மருந்தாளுனர்களுக்கு அரசுப்பணி கிடைக்கின்ற வரையில் அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க 10,000 சிறப்பூதியம் வழங்க வேண்டும்.'

மேலும், மருந்தாளுனர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் பொருட்டு தமிழக அரசு ஆன்லைன் மருந்து வணிகத்தை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் கூட்டத்தில் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Updated On: 25 Sep 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  5. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  6. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  7. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  8. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!
  9. லைஃப்ஸ்டைல்
    விழிகள், அது நம்பிக்கையின் ஒளி..!
  10. வீடியோ
    தலைகீழாக மாறிய தேர்தல் களம் | அதிர்ச்சியில் Siddaramaiah Gang |...