கரூரில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டம்
கரூரில் அதிமுக சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா 74வது பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
HIGHLIGHTS
அதிமுக சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 74வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் அதிமுக சார்பில் கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் உள்ள ஜெயலலிதாவின் உருவசிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்கள் மற்றும் கட்சியினருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. கரூர் மாவட்டம் முழுவதும் கிளைக் கழகங்கள் சார்பில் ஆங்காங்கே ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்டக் கழக துணைச் செயலாளர் சிவசாமி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் திரு.வி.க, இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கமலக்கண்ணன், வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் மாரப்பன், சுப்பிரமணியம் என அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.