/* */

கரூரில் தடுப்பூசி மையத்தில் தள்ளு, முள்ளு வாக்கு வாதம், காற்றில் பறந்த சமூக இடைவெளி

கரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி மையத்தில் தள்ளு, முள்ளு ஏற்பட்டது. சமூக இடைவெளி விதி காற்றில் பறந்தது.

HIGHLIGHTS

கரூரில் தடுப்பூசி மையத்தில் தள்ளு, முள்ளு வாக்கு வாதம், காற்றில் பறந்த சமூக இடைவெளி
X

கரூர் மாவட்டம் காந்திகிராமம் துணை சுகாதார நிலையத்தில் 300 நபர்கள் இன்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

கரூரில் தடுப்பூசி மையத்தில் வரிசையில் நிற்க முந்திக் கொண்டு வந்த நபர்களால் பொதுமக்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கடும் வெயிலைத் தவிர்க்க மரத்தடியில் கூட்டம் கூட்டமாக கூடிய பொதுமக்களால் சமூக இடைவெளி காற்றில் பறந்தது.

நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணியி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கரூர் மாவட்டத்தில் கரூர் பசுபதீஸ்வரர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காந்திகிராமம் துணை ஆரம்ப சுகாதார நிலையம், குளித்தலை உள்ளிட்ட 8 மையங்களில் 2200 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

இந்த நிலையில் காந்திகிராமம் துணை சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடுவதற்காக ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து இருந்தனர்.

பொதுமக்களில் சிலர் வரிசையில் முறையாக நிற்காமல் குறுக்கே வந்த காரணத்தால் பொதுமக்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. அப்போது போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். வரிசையில் நிற்கும் இடத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அவரவர் காலணியைக் கழற்றி வைத்து மரத்தடியில் ஓரமாக ஒதுங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக ஒன்று கூடி நிற்பதால் சமூக இடைவெளி காற்றில் பறந்து தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

காந்திகிராமம் துணை சுகாதார நிலையத்தில் 300 நபர்களுக்கு இன்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர். முதன் முறையாக இந்த மையத்தில் முகாம் நடைபெறுவதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டு சென்றனர்.

Updated On: 18 Jun 2021 11:09 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?