/* */

கரூர்: தடுப்பூசி 2 வது முகாம் 624 இடங்களில் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி

கரூர் மாவட்டத்தில் 2 ம் கட்ட தடுப்பூசி முகாமில் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

கரூர்: தடுப்பூசி 2 வது முகாம்  624 இடங்களில் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி
X

பைல்படமே

கரூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தும் மெகா முகாமில் 624 இடங்களில் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது என ஆட்சியர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, கரூர் மாவட்டத்தில் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி தவறாமல் செலுத்தப்படவேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 12.09.2021 அன்று மாபெரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் முதற்கட்டாக நடத்தப்பட்டது. இம்முகாமில் அறிவித்த இலக்கை காட்டிலும் 61,724 நபர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.

கரூர் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோர் 9,03,245 நபர்கள் , இதில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி மட்டும் செலுத்திக்கொண்டோர் 4,90.693 நபர்கள் . இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டோர் 1,06,543 நபர்கள், 4.12.552 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தவேண்டியுள்ளது.

எனவே, இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கும் . இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட வேண்டியவர்களுக்கும் தற்போது இரண்டாம் கட்டமாக மாபெரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் 19.09.2021 ஞாயிற்றுக்கிழமையன்று மாவட்டம் முழுவதும் நடத்தப்படவுள்ளது. இம்முகாமின் மூலம் ஒரு வட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட வேண்டும் என்ற இலக்கடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது மொத்தம் 624 இடங்களில் தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் நடத்தப்படவுள்ளது . இதில் 3,744 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்..

அரவக்குறிச்சி தொகுதியில் 165 இடங்களிலும், கரூர் தொகுதியில் 96 இடங்களிலும் , கிருஷ்ணராயபுரம் தொகுதியில் 196 இடங்களிலும் , குளித்தலை தொகுதியில் 162 இடங்களிலும், 5 நடமாடும் முகாம்கள் என 624 முகாம்களில் இரண்டாவது முறையாக மாபெரும் கொரோனோ தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. ஒவ்வொரு முகாமிலும் ஒரு செவிலியர் , இரண்டு குழந்தைகள் நல மைய பணியாளர்கள் , ஒரு சுயஉதவிக்குழு உறுப்பினர் . இரண்டு ஆசிரியர்கள் அடங்கிய குழுவினர் பணியாற்றினர்..

இவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தும் குழு , பதிவேடுகள் பராமரிக்கும் குழு , தடுப்பூசி செலுத்திக் கொள்ள வருபவர்களை வரிசைப்படுத்தும் குழு , சமூக இடைவெளியை கடைபிடித்தல் மற்றும் முக கவசம் அணிந்து வந்திருப்பதை உறுதிசெய்தல் குழு என பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். இம்முகாம் மூலம் அனைவரும் கொரோனோ தடுப்பூசியினை செலுத்திக்கொண்டு கொரோனோ தொற்று இல்லாத மாவட்டமாக கரூர் மாவட்டத்தை உருவாக வேண்டும் என்றார் ஆட்சியர்.

Updated On: 19 Sep 2021 4:57 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  2. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  3. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  4. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  5. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  6. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி
  7. கல்வி
    அறிவை விளைவிக்கும் எழுத்து வயல், புத்தகங்கள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை ஏன் அவசியம்..?
  9. சினிமா
    கில்லி படத்துல அது ஃபேக்காம்.. தரணியே சொல்லிட்டாரு..!
  10. ஈரோடு
    ஈரோட்டில் நிழல் சண்டை செயல் முறையில் அசத்திய கராத்தே வீரர்,...