மாநகராட்சி துணை மேயர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை

கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன் வீட்டில் சோதனை தொடங்கியது. தாக்குதலில் ஈடுபட்டதாக திமுகவினர் 8 பேர் கைது

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
மாநகராட்சி துணை மேயர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை
X

கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன் வீட்டில் சோதனை தொடங்கியது

கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன் வீட்டில் சோதனை தொடங்கியது. கரூரில் மூன்றாவது நாளாக வருமான வரித்துறை சோதனை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் தற்போது கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூர் பகுதியில் அமைந்துள்ள துணை மேயர் தாரணி சரவணன் வீட்டில் இரண்டு வாகனங்களில் வந்த எட்டுக்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை துவக்கி உள்ளனர்.

முதல் நாள் சோதனை மேற்கொள்ள வந்த போது திமுக தொண்டர்கள் வழிமறித்து சோதனை செய்யவிடாமல் தடுத்தும் மற்றும் இரவில் சீல் வைத்த போதும் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இரண்டு நாட்கள் சோதனை நடைபெறாத நிலையில் இன்று சோதனையை துவங்கிள்ளனர். தாரணி சரவணன் நிதி நிறுவனம் மற்றும் இரு சக்கர வாகனம் விற்பனை உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வருமான வரித்துறையினரை தாக்கியதான புகாரில் 8 பேர் கைது

கடந்த 26ம் தேதி கரூர், ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீட்டிற்கு வருமான வரித்துறையினர் சோதனைக்கு வந்தனர். சோதனை நடைபெற்றுக் கொண்டிருந்த போது இப்பகுதியில் திமுகவினர் நூற்றுக் கணக்கானோர் திரண்டனர். சோதனைக்கு வந்த அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் தள்ளு, முள்ளும் ஏற்பட்டது. அப்போது, அதிகாரிகள் சோதனைக்கு வந்த கார் கண்ணாடியை உடைததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து இரு தரப்பினரும் மாறி, மாறி புகார் அளித்துள்ளனர். இரு தரப்பினரும் மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் வருமான வரித்துறையினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று திமுகவினர் 6 பேரை கரூர் மாநகர போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ராயனூர் பகுதியில் கொங்கு மெஸ் சுப்பிரமணி வீட்டில் சோதனையிட வந்த போது அதிகாரிகளை தடுத்த வழக்கில் 2 நபர்களை தாந்தோணி மலை காவல் நிலைய போலீசார் கைது செய்தனர் மொத்தம் 8 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் இது தொடர்பாக பலரும் கைது செய்யப்படலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர்.

Updated On: 28 May 2023 12:30 PM GMT

Related News

Latest News

  1. தர்மபுரி
    புரட்டாசி சனிக்கிழமை: உழவர் சந்தையில் ரூ.18 லட்சத்திற்கு விற்பனையான ...
  2. காஞ்சிபுரம்
    பரந்தூர் விமான நிலைய உயர்மட்ட குழு வருகையை கண்டித்து சாலைமறியல்...
  3. கோவில்பட்டி
    கோவில்பட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்: ரூ. 4.99...
  4. திருப்பரங்குன்றம்
    மதுரையில் பாஜக சார்பில் ரத்த தான முகாம்
  5. கோவில்பட்டி
    கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்தில் ரூ. 98 லட்சம் மதிப்பில்...
  6. காஞ்சிபுரம்
    திமுக மருத்துவஅணி சார்பில் 1 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள்...
  7. தஞ்சாவூர்
    இயற்கை உரம் பயன்படுத்தி இயல்பாய் மக்காச்சோள சாகுபடி செய்யும் விவசாயி
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் ஒரே நாளில் மூன்று வீடுகளில் திருடிய மர்ம நபர்கள்
  9. தூத்துக்குடி
    கூட்டுறவு வங்கி காசோலைகளை முறைகேடாக பயன்படுத்தி மோசடி: 3 பேர் கைது
  10. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் கோ ஆப் டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்கம்