சுதந்திர போராட்ட வீரர் வ. உ. சிதம்பரனாருக்கு நினைவஞ்சலி
சுதந்திர போராட்ட வீரர் வ உ சிதம்பரனார் நினைவு தினத்தையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
HIGHLIGHTS
அனைத்துலக வ.உ.சி பிள்ளைமார் நலச்சங்கத்தின் சார்பில் சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனாருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கரூர் மேற்கு நகர தலைவர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. கரூர் மேற்கு நகர செயலாளர் செந்தில்குமார், கரூர் நகர தலைவர் வடிவேல், நகர செயலாளர் மணிவண்ணன், கரூர் நகர தலைவர் சதாசிவம் ஆகியோர் வரவேற்புரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சிக்கு கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஏ எம் ஆறுமுகம் பிள்ளை, கரூர் மேற்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக அனைத்துலக வஉசி பிள்ளைமார் நல சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன் சக்திவேல் பிள்ளை கலந்து கொண்டு வஉசி-யின் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், அகில பாரத இந்து மகா சபை சித்தர் பேரவை, சிவ ராமச்சந்திர சுவாமி மாநில அமைப்பு செயலாளர் கவி பெரியசாமி பிள்ளை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.