Begin typing your search above and press return to search.
கரூர் ஆட்சியர் அலுவலகத்தின் அருகே காய்ந்த புற்கள் எரிந்து சாம்பல்
கரூர் ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு ஏக்கர் கணக்கில் இருந்த காய்ந்த புற்கள் எரிந்து சாம்பலாகின.
HIGHLIGHTS
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு எதிரில் உள்ள ராம் நகர் குடியிருப்பு பகுதியில் காலியாக உள்ள வீட்டுமனைப் பகுதிகளில் காய்ந்த புற்கள் உள்ளன. இங்கு, தீ பரவி ஏக்கர் கணக்கில் எரிந்து வந்துள்ளது. குடியிருப்புகளுக்கு அருகில் வந்ததால், அவற்றை கட்டுப்படுத்த முயன்றும் முடியாததால் தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதியினர் தகவல் கொடுத்தனர்.
விரைந்து வந்த கரூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், எரிந்து கொண்டிருந்த தீயை அரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால், பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.