/* */

கரூர், காந்திகிராம் பகுதியில் மது அருந்திய இளைஞர் உயிரிழப்பு, மற்றொருவர் கவலைக்கிடம்

கரூர், காந்திகிராம் பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திய இளைஞர் உயிரிழப்பு, மற்றொருவர் கவலைக்கிடமாக சிகிச்சையில் உள்ளார்.

HIGHLIGHTS

கரூர், காந்திகிராம் பகுதியில் மது அருந்திய இளைஞர் உயிரிழப்பு, மற்றொருவர் கவலைக்கிடம்
X

 கரூரில் மது அருந்தி உயிரிழந்த இளைஞர் மோகன்

கரூரில் மது அருந்திய ஒருவர் உயிரிழந்தார் மற்றொருவர் அபாய கட்டத்தில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை சேர்க்கப்பட்டுள்ளார். உயிரிழப்புக்கு காரணமான மது டாஸ்மாக் மதுபான கடையில் வாங்கப்பட்டதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கரூர் காந்திகிராமம் பகுதியை சேர்ந்த மோகன் நண்பர்கள் சிலரோடு சேர்ந்து நேற்று பிற்பகலில் மது அருந்தியுள்ளார். சிறிது நேரத்தில் மோகன் வயிற்று வலிப்பதாக கூறி சுருண்டு விழுந்தார். இதையடுத்து அவரை அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மோகன் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

மோகனுடன் மது அருந்திய சசிகுமார் என்பவரும் உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.

இது குறித்த தகவலறிந்த பசுபதிபாளையம் காவல் நிலைய போலீசார் உயிரிழந்த மோகனின் நண்பர்களிடம் மது டாஸ்மாக் மதுபான கடையில் வாங்கப்பட்டதா அல்லது எங்கு வாங்கப்பட்டது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 11 July 2021 3:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’
  2. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...
  3. லைஃப்ஸ்டைல்
    ஆராரோ ஆரிராரோ - தாலாட்டு பாடல் கேட்ட ஞாபகம் இப்பவும் இருக்குதா?
  4. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!
  5. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  6. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை
  7. வீடியோ
    🔴LIVE : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல்...
  8. சினிமா
    இளையராஜாவாக எப்படி நடிக்கப்போகிறேன்? தனுஷ் பெருமிதம்..!
  9. குமாரபாளையம்
    FDP AI இயங்கும் ஆராய்ச்சி தொகுதி 3 - நிரல் விவரங்கள்:
  10. அரசியல்
    தேர்தல் பிரசாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா..!