கரூர்: வருமான வரித்துறை அதிகாரிகளை தடுத்த நபர்கள் மீது வழக்கு பதிவு

கரூரில் அரசு வருமான வரித்துறை அதிகாரிகளை தடுத்தவர்கள் மீது அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
கரூர்: வருமான வரித்துறை அதிகாரிகளை தடுத்த நபர்கள் மீது வழக்கு பதிவு
X

கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகளை தடுத்து நிறுத்திய திமுகவினர்

தமிழ்நாடு முழுவதும் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். டாஸ்மாக் மற்றும் மின்துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகளிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தினர்.

இதற்கிடையில், கரூரில் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் நேற்று வருமான வரி சோதனை நடைபெற்ற இடத்தில் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளை திமுக தொண்டர்கள் முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர். மேலும் அதிகாரிகளின் கார் கண்ணாடியை உடைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதில் திமுக தொண்டர்களில் ஒருவரை வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கியதாக கூறப்படுகிறது. எதிர்ப்பு காரணமாக அதிகாரிகள் அப்பகுதியில் இருந்து புறப்பட்டனர். பாதுகாப்பு கருதி வருமானவரித்துறை அதிகாரிகள் கரூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த நிலையில், கரூரில் நேற்று சோதனை நடத்த வந்த வருமான வரித்துறை அதிகாரிகளை தடுத்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாக கரூர் மாவட்ட காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

அதே போல் திமுகவினரை தாக்கிய அதிகாரிகள் மீது திமுகவினர் கொடுத்த புகாரின் பேரில் வருமான வரித்துறையினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On: 28 May 2023 3:09 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    ஒடிசா ரயில் விபத்து: பாலசோரிலிருந்து இன்று சென்னைக்கு வந்தடைந்த...
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட உழவர் சந்தை: இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு திமுகவினர் அஞ்சலி
  4. பொன்னேரி
    திருவள்ளூர் மாவட்டத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆன்மீகம்
    12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்
  7. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை 5 பைசா உயர்வு
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் விடிய விடிய கிரிவலம் வந்த பக்தர்கள்
  10. சேலம்
    பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்கு முக்கியத்துவம்: மாவட்ட கண்காணிப்பு...