Begin typing your search above and press return to search.
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி பாஜகவினர் மனித சங்கிலி போராட்டம்
கரூரில் நடந்த பாஜகவின் மனித சங்கிலி போராட்டத்தில் 200 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தமிழக அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.
HIGHLIGHTS
கரூரில், பாரதிய ஜனதா கட்சியின் ஓபிசி அணி மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு சார்பில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகே கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் ஓ.பி.சி. அணி மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் பிரிவு சார்பில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி மனிதசங்கிலி போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமை வகித்தார்.
இந்த மனித சங்கிலி போராட்டத்தில், பாஜகவின் பல்வேறு அணிகளைச் சேர்ந்த சுமார் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தியும், பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு குறைத்த பிறகும் தமிழகத்தில் குறைக்காத மாநில அரசை கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.