Begin typing your search above and press return to search.
கரூரில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
HIGHLIGHTS
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வலியுறுத்தியும், அம்மா மினி கிளினிக்குகளை திமுக அரசு மூடுவதைக் கண்டித்தும், அனைவருக்கும் பொங்கல் பரிசாக ரூ.5000/ வழங்க கோரியும், மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தவில்லை எனக்கூறி திமுக அரசை கண்டித்து கரூர் மாவட்ட அதிமுக சார்பில் கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கரூர் மாவட்ட அதிமுக செயலாளர், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் சின்னசாமி உள்ளிட்டோர் தலைமையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அரசிற்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். இரண்டு மணி நேரமாக நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் காரணமாக கரூர் - கோவை சாலையில் போக்குவரத்து ஒரு வழிப் பாதையாக மாற்றி விடப்பட்டது.