கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் வழங்கும் விழா

கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் ஆற்றில் விடும் விழா வருகிற 31-ந்தேதி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் வழங்கும் விழா
X

கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் விழா.(மாதிரி படம்)

கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் ஆற்றில் விடும் விழா வருகிற 31-ந்தேதி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கம்பம் வழங்கும் விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெற்றது.


முன்னதாக மாரியம்மன் மூப்பன் வகையறாவைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் கனவில் மூன்று நாட்களுக்கு முன்பு அம்மன் தோன்றி கம்பம் இருக்கும் இடத்தை காண்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து முக்குலை கம்பம் பாலம்மாள்புரம் பகுதியில் வெட்டி எடுக்கப்பட்டு பாலம்மாள் புரத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கு இன்று அதிகாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பின்னர் கம்பத்திற்கு சிறப்பு ஆராதனை நடைபெற்று பின்னர் கம்பம் ஊர்வலம் தொடங்கியது. வேலம்மாள் புரத்தில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலமானது ஐந்து ரோடு வழியாக ஜவகர் பஜார் அடைந்து பின்னர் கோவிலை வந்தடைந்தது. அப்போது கோவிலில் அறங்காவலர் முத்துக்குமாரிடம் முக்கலை கம்பம் மூக்கன் வகையறாக்களால் ஒப்படைக்கப்பட்டது.


பின்னர் கோவிலில் கம்பம் செதுக்கப்பட்டு பின்னர் மாலையில் அமராவதி ஆற்றில் சிறப்பு ஆராதனை நடைபெற்று தொடர்ந்து கம்பம் அமராவதி ஆற்றில் இருந்து எடுத்துவரப்பட்டு கோவில் முன்பாக நடப்பட்டது. கோவில் முன்பாக கம்பத்திற்கு பக்தர்கள் புனித நீர் ஊற்றி வழிபட்டனர். தொடர்ந்து வருகிற 31-ந்தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் ஆற்றில் விடும் விழா நடக்கிறது. இன்று நடைபெற்ற கம்பம் வழங்கும் விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

Updated On: 14 May 2023 8:00 AM GMT

Related News

Latest News

  1. டாக்டர் சார்
    cipco pharmaceuticals தொற்று நோய்களை எதிர்த்துப் போராட சிப்கோ வைரஸ்...
  2. சேலம்
    “ஏற்காடு எங்கள் பெருமை” விழிப்புணர்வு நடைப்பயணம்: எம்எல்ஏ, ஆட்சியர்...
  3. லைஃப்ஸ்டைல்
    Betrayal quotes in tamil-துரோகித்து வெல்வதைவிட நேர்மையாக தோற்பது...
  4. தமிழ்நாடு
    mavattam in tamilnadu தமிழக மாவட்டங்களின் சிறப்பு பற்றி தெரியுமா...
  5. ஈரோடு
    காஞ்சிக்கோவில், மயிலம்பாடி அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
  6. லைஃப்ஸ்டைல்
    Mulam in tamil-'சாண் ஏறுனா முழம் சறுக்குது' இதில் முழம் என்பது என்ன?...
  7. இந்தியா
    ரயில் விபத்துகளில் உயிரிழந்தோரின் நிவாரணத்தொகை உயர்வு
  8. தமிழ்நாடு
    இறக்கும் முன் உடல் உறுப்பு தானம் செய்தால் அரசு மரியாதை:முதல்வர் ...
  9. தர்மபுரி
    ஒகேனக்கல்லில் நீர்வரத்து 6 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
  10. ஈரோடு மாநகரம்
    சப்பாத்தியில் பூச்சி, ஈரோட்டில் உணவகம் மூடல்