/* */

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பகுதி சந்தைகளில் முருங்கைக்காய் விலை உயர்வு..!

வரத்துக் குறைவால் முருங்கைக்காய் விலை அதிரடி உயர்வு. விவசாயிகள் மகிழ்ச்சி.

HIGHLIGHTS

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பகுதி  சந்தைகளில்  முருங்கைக்காய் விலை உயர்வு..!
X

அரவக்குறிச்சி பகுதியில் சாகுபடி செய்யப்படும் முருங்கை.(கோப்பு படம்)

கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி சந்தை முருங்கைக்காய் மற்றும் நாட்டு காய்கறிகளுக்கு முக்கிய சந்தையாக விளங்கிவருகிறது. இந்நிலையில் அரவக்குறிச்சி சந்தைக்கு வரத்து குறைவால் முருங்கைக்காய் கிலோ ரூ.60-க்கு விற்பனையாகிறது.

கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஈசநத்தம், ஆத்துமேடு, கொத்தப்பாளையம், நாகம்பள்ளி, வெஞ்சமாங்கூடலூர், தடாகோவில், முத்துக்கவுண்டன்பாளையம், சின்னாக்கவுண்டனூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் முருங்கைக்காய் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை முருங்கைக்காய் சீசன் ஆகும். இந்த சமயத்தில் முருங்கைக்காய் அதிகளவில் காய்க்கும். தற்போது டிசம்பர் மாதம் தொடங்கவுள்ள நிலையில் முருங்கை சீசன் குறைந்து காய்கள் வரத்து குறைவாக உள்ளது.


கிலோ ரூ.60-க்கு விற்பனை

இதனால் அரவக்குறிச்சி, மலைக்கோவிலூர், இந்திரா நகர், ஆத்துமேடு, ஈசநத்தம், பள்ளப்பட்டி பிரிவு உள்ளிட்ட பகுதியிலுள்ள முருங்கைக்காய் மார்க்கெட்டில் வியாபாரிகள் முருங்கைக்காயை விவசாயிகளிடம் கொள்முதல் செய்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வருகின்றனர். தற்போது வரத்து குறைவாக உள்ளதால் முருங்கைக்காய் கிலோ ரூ.60-க்கு விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி பகுதி வறட்சியான பகுதி என்றாலும் கூட கிணற்றுப்பாசனம் மூலமாக விவசாய சாகுபடி சிறப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக அரவக்குறிச்சி, ஈசநத்தம், ஆத்துமேடு, கொத்தப்பாளையம், நாகம்பள்ளி, வெஞ்சமாங்கூடலூர், தடாகோவில், முத்துக்கவுண்டன்பாளையம், சின்னாக்கவுண்டனூர் போன்ற பகுதிகளில் நாட்டுக்காய்கறிகளான பாகல், சுரைக்காய், வெண்டை, பூசணி, பீர்க்கை, தக்காளி, புடலை, அவரைக்காய், முருங்கை போன்றவை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இப்பகுதி விவசாயிகள் விவசாய சாகுபடியுடன் ஆடு, மாடு வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பசு வளர்ப்பில் ஈடுபட்டு பால் உற்பத்தியும் செய்து வருகின்றனர். இப்பகுதியில் முருங்கை சாகுபடியில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தற்போது முருங்கை சீசன் முடியும் தருணம் என்பதால் வரத்து குறைந்து விலை அதிகமாகிவிட்டது. அதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 30 Nov 2022 10:17 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?