/* */

மது படுத்தும் பாடு - போதையில் தாயை கொன்ற மகன் கைது!

கரூர் அருகே மது போதையில் தாயை கடப்பாரையால் அடித்துக் கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

மது படுத்தும் பாடு - போதையில் தாயை கொன்ற மகன் கைது!
X

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த ஜங்கால்பட்டியை சேர்ந்தவர் பழனியம்மாள் (60). இவரது மகன் முத்துராஜ் (35). இவர் தனியார் கம்பெனியில் வாட்ச்மேனாக வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முத்துராஜ் பக்கத்து வீட்டில் உள்ள சக்திவேல் என்பவருடன் குடித்துவிட்டு, போதையில் தாயிடம் தகராறு செய்துள்ளார். குடித்துவிட்டு ஏன் வீணாக தகராறு செய்கிறாய் என கூறி, தாயார் பழனியம்மாள் மகனை கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த முத்துராஜ், வீட்டில் இருந்த கடப்பாரை எடுத்து, தன் தாயார் பழனியம்மாள் தலையில் அடித்துள்ளார். இதில் பலத்த காயமுற்ற பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த அரவக்குறிச்சி காவல் நிலையப் போலீசார் முத்துராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 30 April 2021 2:13 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    இசையில் மயங்கியதால் தொட்டியம் வந்தடைந்த மதுரை காளியம்மன் வரலாறு
  2. இந்தியா
    இந்தியாவின் தேசிய பறவை மயிலை கொன்றால் எத்தனை ஆண்டு சிறைத்தண்டனை...
  3. இந்தியா
    இந்தியாவின் தேசிய விலங்கு புலிகள் ஊருக்குள் புகுவது ஏன்?
  4. கரூர்
    கரூர் எம்பி தொகுதியில் இதுவரை ரூ1.35 கோடி பணம் பரிசு பொருள் பறிமுதல்
  5. கோவை மாநகர்
    ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பணம் கொடுத்தது குறித்து அண்ணாமலை விளக்கம்..!
  6. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் வாக்களிக்க நூதன வரவேற்பளித்த அரசு அதிகாரிகள்..!
  7. குமாரபாளையம்
    புனித வெள்ளியையொட்டி நடந்த சிலுவைப்பாதை..!
  8. லைஃப்ஸ்டைல்
    உளுந்துண்டு வாழ்ந்தால் வளம்காணும் உடலே..! எப்டீ? படீங்க..!
  9. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  10. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு