Begin typing your search above and press return to search.
மது படுத்தும் பாடு - போதையில் தாயை கொன்ற மகன் கைது!
கரூர் அருகே மது போதையில் தாயை கடப்பாரையால் அடித்துக் கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த ஜங்கால்பட்டியை சேர்ந்தவர் பழனியம்மாள் (60). இவரது மகன் முத்துராஜ் (35). இவர் தனியார் கம்பெனியில் வாட்ச்மேனாக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முத்துராஜ் பக்கத்து வீட்டில் உள்ள சக்திவேல் என்பவருடன் குடித்துவிட்டு, போதையில் தாயிடம் தகராறு செய்துள்ளார். குடித்துவிட்டு ஏன் வீணாக தகராறு செய்கிறாய் என கூறி, தாயார் பழனியம்மாள் மகனை கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த முத்துராஜ், வீட்டில் இருந்த கடப்பாரை எடுத்து, தன் தாயார் பழனியம்மாள் தலையில் அடித்துள்ளார். இதில் பலத்த காயமுற்ற பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த அரவக்குறிச்சி காவல் நிலையப் போலீசார் முத்துராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.