Begin typing your search above and press return to search.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கன மழை: முழுபாதிப்பை சந்தித்த ரப்பர் விவசாயம்
தொடர் மழை காரணமாக ரப்பர் விவசாயத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ள தின கூலி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது, இதன் காரணமாக மாவட்டத்தில் நடைபெறும் முக்கிய விவசாயங்களில் ஒன்றான ரப்பர் விவசாயம் முற்றிலுமாக பாதிப்பை சந்தித்து உள்ளது.மழைக்காலத்தில் ரப்பர் பால் வெட்ட முடியாது என்ற நிலையில் ரப்பர் பால் வெட்டும் தொழிலை மட்டுமே நம்பி வாழும் நூற்றுக்கணக்கான தினக்கூலி தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர்.
மாவட்டத்தில் மலையோர பகுதிகளான பெருஞ்சாணி, சிவலோகம், அருமனை உள்ளிட்ட மேற்கு மாவட்ட பகுதிகளில் பெருமளவில் ரப்பர் விவசாயம் நடைபெறும் நிலையில் அந்த பகுதிகளிலேயே அதிக அளவில் மழையும் பதிவாகி உள்ளது.தொடர் மழையின் காரணமாக ரப்பர் விவசாயத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டு உள்ள தின கூலி தொழிலாளர்கள் பாதிப்பை சந்தித்து உள்ளனர்.