/* */

குமரி: ஓடைக்குள் கவிழ்ந்தது கார் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்

குமரியில், மண்சரிவால் மழைநீர் ஓடைக்குள் கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில், ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

HIGHLIGHTS

குமரி: ஓடைக்குள் கவிழ்ந்தது கார் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்
X

கன்னியாகுமரி மாவட்டம் காப்புக்காடு அருகே குன்னத்தூரில் இருந்து சாத்திரவிளை செல்லும் சாலையின் ஓரம், உடைப்பு ஏற்பட்டு சாலை வீதி குறைவாக காணப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த சாலை வழியாக காப்புகாடு பகுதியை சேர்ந்த ஆகாஷ் என்ற வாலிபர் தனது சகோதரியின் வீட்டுக்கு செல்ல வேண்டி தனக்கு சொந்தமான காரில் வந்துள்ளார்.

அப்போது அகலம் குறைவாக இருந்த சாலை வழியாக செல்ல முயன்ற போது மண் சரிவு ஏற்பட்டு, மழைநீர் ஓடைக்குள், கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.இதில் வாகனம் முழுவதும் சேதமடைந்த நிலையில், காரில் இருந்த ஆகாஷ் காயங்கள் ஏதும் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சாலை துண்டிக்கப்பட்டு சீரமைக்கபடாமல் கிடப்பதே விபத்திற்கு காரணம் என ஊர்மக்கள் குற்றம் சாட்டினர்.

Updated On: 20 Sep 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  8. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    வெயிலில் வாடிய பெண்களுக்கு வழங்கப்பட்ட குடை மற்றும் தண்ணீர் பாட்டில்
  10. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!