/* */

குமரியில் படகு கவிழ்ந்து விபத்து: கடலில் குதித்து உயிர் தப்பிய மீனவர்கள்

கடல் சீற்றத்தால் படகு கவிந்து விபத்து ஏற்பட்ட நிலையில் அதில் பயணம் செய்த மீனவர்கள் கடலில் குதித்து உயிர் தப்பினர்.

HIGHLIGHTS

குமரியில் படகு கவிழ்ந்து விபத்து: கடலில் குதித்து உயிர் தப்பிய மீனவர்கள்
X

கடல் சீற்றத்தால் படகு கவிந்து விபத்து ஏற்பட்ட நிலையில் அதில் பயணம் செய்த மீனவர்கள் கடலில் குதித்து உயிர் தப்பினர்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் கேரளாவில் கனமழை பெய்து வரும் நிலையில் கடல்பகுதியிலும் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக கடல் சீற்றமாக காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரள மாநிலம் பூவார் அருகே புதியதுறை மீனவ கிராமத்தை சேர்ந்த 4 மீனவர்கள் தங்களது பைபர் படகில் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முயன்றனர்.

அப்போது கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டதால் படகு கடல் அலையில் சிக்கி அந்தரத்தில் பறந்து விபத்தில் சிக்கியது. படகு கவிழாமல் இருக்க மீனவர்கள் பெரும் முயற்சி மேற்கொண்டும் பயனில்லாமல் போனது.

இதனால் ஆபத்தை உணர்ந்த மீனவர்கள் படகில் இருந்து கடலில் குதித்து தப்பித்தனர். மேலும் படகு கரை பகுதியிலேயே கடல் அலையில் சிக்கி கவிழந்தது.

இந்த விபத்து நிகழ்வதை கண்ட அந்த பகுதி மீனவர்கள் ஓடி சென்று விபத்தில் சிக்கிய மீனவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 13 Oct 2021 3:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?