/* */

நாகர்கோவில் ஒழுகின சேரி ரேஷன் கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்

நாகர்கோவில் ஒழுகின சேரி ரேஷன் கடை ஊழியரின் நடவடிக்கையை கண்டித்து கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

நாகர்கோவில் ஒழுகின சேரி ரேஷன் கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்
X

நாகர் கோவில் ஒழுகின சேரி ரேஷன் கடையை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் அமைந்துள்ள ஒழுகினசேரி நியாயவிலை கடையை காலை 11 மணிக்கு திறக்கும் கடை ஊழியர் 12.30 மணிக்கு கடையை அடைத்து விட்டு சென்று விடுவதாகவும் பின்னர் 3 மணி அளவில் கடைக்கு வரும் ஊழியர் 4.30 மணிக்கு கடையை அடைத்து விட்டு சென்று விடுவதாகவும் ரேஷன் பொருட்களை பொதுமக்களுக்கு வழங்காமல் அதனை கள்ளசந்தையில் விற்பனை செய்வதாகவும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நீண்ட காலமாக குற்றம் சாட்டி வந்தனர்.

இந்நிலையில் நியாயவிலை கடை ஊழியர் பொதுமக்களையும் குறிப்பாக பெண்களை தரகுறைவாகவும், அருவறுக்க தக்க வார்த்தைகளால் பேசுவதாக கூறியும் கடை ஊழியர் மீது நடவடிக்கை எடுப்பதோடு அவரை மாற்ற வலியுறுத்தி ரேஷன் கடையை முற்றுகையிட்ட பெண்கள் நியாயம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறும் போது கடையை ஒழுங்காக திறக்காமல் பொதுமக்களை அவ மரியாதையுடன் பேசுவதோடு பொது மக்களுக்கு கொடுக்க வேண்டிய பொருட்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்துவரும் கடை ஊழியரிடம் ரேஷன் பொருட்கள் கேட்டால் கைகட்டி வாய் பொத்தி பணிவன்புடன் கேட்டால் மட்டுமே பொருட்கள் கொடுக்கப்படும் என கூறுகிறார்.

இதுகுறித்து அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம், உடனடியாக கடை ஊழியரை மாற்ற வேண்டும். மேலும் இது வரை நடைபெற்ற மோசடி குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லை என்றால் மிகப்பெரிய போராட்டத்தை மேற்கொள்வோம் என தெரிவித்தனர்.

Updated On: 21 Jan 2022 3:20 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  8. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    வெயிலில் வாடிய பெண்களுக்கு வழங்கப்பட்ட குடை மற்றும் தண்ணீர் பாட்டில்
  10. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!