/* */

குமரியில் பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு அளித்த தன்னார்வலர்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு அளித்த தன்னார்வலர்கள் முயற்சி பாராட்டும் வகையில் அமைந்தது.

HIGHLIGHTS

குமரியில் பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு அளித்த தன்னார்வலர்கள்.
X

பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு அளித்த தன்னார்வலர்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலை ஓரங்களில் வசித்து பிச்சை எடுத்து வாழ்ந்து வரும் பிச்சைக்காரர்கள் கவலைகள் தீர மது அருந்தி பொதுமக்களுக்கு இடையூறு செய்வதாகவும் பல நேரங்களில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் புகார்கள் இருந்து வந்தன.

தங்களுக்கென்று ஒன்றும் இல்லை என்ற விரக்தியில் பிச்சைக்காரர்கள் வழிதவறி செல்வதை உணர்ந்த அபய கேந்திரா அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அவர்களை ஒன்றிணைத்து அவர்களுக்கென்று ஒரு மறுவாழ்வு அளிக்க வேண்டும் என முடிவு செய்தனர்.

இந்த முடிவை காவல்துறை, மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், மற்றும் நகராட்சி நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தி உதவி கேட்டனர் காவல்துறை சார்பில் ஆய்வாளர் சாம்சங் இளைஞர்களின் முயற்சிக்கு ஊக்கமளித்து அவர்களோடு சேர்ந்து பணியாற்றினார்.

அதன்படி மாவட்டம் முழுவதும் இருந்து மீட்கப்பட்ட பிச்சைக்காரர்களை வாகனம் மூலம் அழைத்து வந்து நாகர்கோவில் மாநகராட்சிக்கு சொந்தமான அனாதை மடத்தில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தனர்.

தினசரி உணவு, உடல்நலன் சோதனை, மருந்துகள், ஆடைகள் போன்றவற்றை அபய கேந்திரா அமைப்பினர் அளித்த நிலையில் இளைஞர்கள், தன்னார்வலர்கள், மாநகராட்சி, காவல்துறை இணைந்து செய்த இந்த பெரும் முயற்சி அனைத்து தரப்பினரின் பாராட்டை பெரும் வகையில் அமைந்தது.

Updated On: 4 Jun 2021 2:40 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  2. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  3. தமிழ்நாடு
    வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க மரம் வளர்ப்போம் வாங்க..!
  4. கோவை மாநகர்
    வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து கோவையில்...
  5. கோவை மாநகர்
    ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி குறித்த...
  6. லைஃப்ஸ்டைல்
    செரிமான பிரச்சனையா? சாப்பிட்ட பின் இவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்
  7. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே பைக் மீது லாரிமோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
  8. ஆன்மீகம்
    குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் மே1-ல் குரு பெயர்ச்சி...
  9. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  10. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா