/* */

குமரியில் விமரிசையாக நடந்த வித்யாரம்பம் எனும் ஏடு தொடங்குதல் நிகழ்வு

விஜயதாசமியை முன்னிட்டு, குமரியில் வித்யாரம்பம் எனும் ஏடு தொடங்குதல், இன்று விமரிசையாக நடைபெற்றது.

HIGHLIGHTS

குமரியில் விமரிசையாக நடந்த வித்யாரம்பம் எனும் ஏடு தொடங்குதல் நிகழ்வு
X

வித்யாரம்பம் நிகழ்வில், குழந்தைக்கு எழுத்தறிவிக்கப்பட்டது.

நவராத்திரி விழாவின் இறுதி நாளான இன்று, விஜயதசமி விழா கொண்டாடப்படுகிறது. இந்நாளில் புதிய செயல்களை தொடங்கினால் அது பலமடங்காக பெருகும் என்பது, காலம் காலமாக இருந்து வரும் ஐதீகமாக உள்ளது. அதன்படி விஜயதசமி நாளில் குழந்தைகளுக்கு கல்வி தொடங்கினால் அந்த குழந்தைகள் கல்வி செல்வம் கொண்டவர்களாக வருவார்கள் என்பது நம்பிக்கை.

அதன்படி இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு கோவில்களில் வித்யாரம்பம் எனும் ஏடு தொடங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாங்கூர் சமஸ்தானத்தின் பழைய அரண்மனையான பத்பநாபபுரம் அரண்மனையில் உள்ள கம்பர் புகழ் பாடிய தேவார கட்டு சரஸ்வதி அம்மன் கோவில், ஆதி பராசக்தி சித்தர் பீடம் கோவில், பார்வதிபுரம் ஐயப்பன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் நடைபெற்ற வித்யாரம்பம் எனும் ஏடு தொடங்குதல் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில், அரிசியில் 'அ' எனும் அகர ஓம்கார எழுத்தை எழுதி தங்கள் குழந்தைகளுக்கு கல்வி தொடங்கினர்.

Updated On: 15 Oct 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?