/* */

குமரியில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான பயிற்சி: எஸ்பி துவக்கி வைப்பு

குமரியில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான பயிற்சியை தொடங்கி வைத்த காவல் கண்காணிப்பாளர் பயிற்சி போலீசாருக்கு அறிவுரை வழங்கினார்.

HIGHLIGHTS

குமரியில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான பயிற்சி: எஸ்பி துவக்கி வைப்பு
X

குமரியில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான பயிற்சியை தொடங்கி வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பயிற்சி போலீசாருக்கு அறிவுரை வழங்கினார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், மறவன்குடியிருப்பு ஆயுதப்படையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு இரண்டாம் நிலை காவலர்களுக்கான பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் இன்று தொடங்கி வைத்தார்.

அப்போது காவலர்கள் மத்தியில் தனது பயிற்சி பெற்ற அனுபவத்தை கூறி பேசிய அவர் காவலர் பணி என்பது உன்னத பணி எனவே பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என கூறினார். மேலும் பயிற்சியில் கஷ்டங்கள் இருக்கும், அதனை மகிழ்ச்சியோடு ஏற்று செய்ய வேண்டும் என்றும், நீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தார் காவல்துறையை அணுகும்போது காவலர்கள் எப்படி உங்களை நடத்த வேண்டும் என்று நீங்கள் விரும்புவது போல் நீங்கள் பொதுமக்களிடம் நடந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் மாதம்தோறும் குறைதீர்ப்பு முகாம் வைத்து குறைகளை தீர்த்து வைப்பதாகவும், சிறப்பாக செயல்பட்டு தமிழக காவல்துறைக்கு நல்ல பெயர் பெற்று தர வேண்டும் என்று அறிவுரை வழங்கி அவர்களை வாழ்த்தினார். இன்று தொடங்கி உள்ள பயிற்சி வகுப்பு மூலம் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 200 காவலர்கள் பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.

Updated On: 14 March 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  4. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  5. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  6. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  7. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  8. திருவள்ளூர்
    பெரியபாளையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்: புறவழிச்சாலை அமைக்க...
  9. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 96 கன அடியாக அதிகரிப்பு
  10. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?