/* */

குமரியில் வருவாய்த்துறை அதிகாரிகள் சோதனையில் சிக்கிய 12 லாரிகள்

குமரியில் வருவாய்த்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் அதிகபாரம் ஏற்றி சென்ற 12 லாரிகள் சிக்கின.

HIGHLIGHTS

குமரியில் வருவாய்த்துறை அதிகாரிகள் சோதனையில் சிக்கிய 12 லாரிகள்
X

குமரி மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் அதிக பாரம் ஏற்றி சென்ற 12 லாரிகள் சிக்கியது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக பாரங்களை ஏற்றி கொண்டு கனரக வாகனங்கள் அதிக வேகமாக செல்வதால் விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாகி வந்த நிலையில் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை இருந்து வந்தது.

இதனிடையே குமரி மாவட்ட வருவாய்த்துறை பறக்கும் படை தாசில்தார் அப்துல் மன்னா தலைமையில் அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் அதிக பாரம் ஏற்றிக்கொண்டு அதிவேகமாக சென்ற 12 கனரக வாகனங்கள் சிக்கியது. இந்த கனரக வாகனங்கள் அனைத்தும் வருவாய்த்துறை அலுவலகம் கொண்டு வரப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் இந்த சோதனை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கனிம வளங்கள் கடத்தலில் ஈடுபடும் வாகனங்கள் மீதும் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Updated On: 6 Aug 2021 3:53 PM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...
  2. ஈரோடு
    அந்தியூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 10ம் வகுப்பு மாணவன்...
  3. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  4. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  5. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  6. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  7. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
  8. ஈரோடு
    ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
  9. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  10. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!