/* */

கனமழையால் துண்டிக்கப்பட்ட பாலம் - குமரியில் 350 குடும்பங்கள் தவிப்பு

கன்னியாகுமரியில், கனமழையால் பாலம் துண்டிக்கப்பட்ட நிலையில், 350 குடும்பங்கள் தவித்து வருகின்றன.

HIGHLIGHTS

கனமழையால் துண்டிக்கப்பட்ட பாலம் - குமரியில் 350 குடும்பங்கள் தவிப்பு
X

 பெருஞ்சாணி அணைக்கு செல்லும் நீர் ஓடு பாதையில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால், குறுக்கே அமைந்துள்ள தற்காலிக பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், ஆரல்வாய்மொழி, மார்த்தாண்டம் உட்பட மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் தொடங்கி விடிய விடிய பெய்தது. மாவட்டத்தின் மலையோர பகுதிகளிலும் கனமழை தொடர்ந்து நீடித்து வருவதால் மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு 1, சிற்றாறு 2 உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையில் இருந்து உபரி நீர் பெருமளவில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கீரிப்பாறை மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இருந்து பெருஞ்சாணி அணைக்கு செல்லும் நீர் ஓடு பாதையில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தின் காரணமாக நீர்ஓடு பாதையின் குறுக்கே அமைந்துள்ள தற்காலிக பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால், அரசு ரப்பர் கழக குடியிருப்பு செல்லும் பாதை துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால், அப்பகுதியில் 350 குடும்பங்கள் தவித்து வருகின்றன. மீட்புக் குழுவினர்,அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.

Updated On: 27 Sep 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து
  2. கும்மிடிப்பூண்டி
    ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள்...
  3. தென்காசி
    அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  5. இராஜபாளையம்
    திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் தமிழக அமைச்சர் பிரச்சாரம்
  6. கோவை மாநகர்
    40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் : கோவையில் பேசிய கனிமொழி...
  7. வீடியோ
    🔴LIVE : வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜ் ஆதரித்து பாஜக மாநில தலைவர்...
  8. கவுண்டம்பாளையம்
    பாஜக பொய் செய்திகளை பரப்பி வருகிறது : கனிமொழி குற்றச்சாட்டு
  9. சிங்காநல்லூர்
    தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றுவோம் : பிரேமலதா...
  10. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...