/* */

குமரியில் தடுப்பூசி போட்டால் தங்க நாணயம் பரிசு: மாவட்ட ஆட்சியர் தகவல்

தடுப்பூசி போட்டால் குலுக்கள் முறையில் தங்க நாணயம் பரிசு அளிக்கப்படும் என குமரி மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.

HIGHLIGHTS

குமரியில் தடுப்பூசி போட்டால் தங்க நாணயம் பரிசு: மாவட்ட ஆட்சியர் தகவல்
X

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த்.

கொரோனா நோய் தொற்றை தடுக்கும் வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஞாயிற்று கிழமை தோறும் மெகா தடுப்பூசி முகாம் மூலம் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு இலவசமாக போடப்பட்டு வருகிறது. அதன்படி இதுவரை நடைபெற்ற 4 தடுப்பூசி முகாம் மூலம் 2 லட்சத்து 22 ஆயிரத்து 306 நபர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன.

மேலும் தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் மாவட்டத்தில் 66% பொதுமக்களே தடுப்பூசி போட்டுள்ள நிலையில் மீதம் உள்ள 33% பொதுமக்களுக்கும் தடுப்பூசி செலுத்த தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் நாளை நடைபெறும் ஐந்தாம் கட்ட தடுப்பூசி முகாம் மூலம் நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம் என மாவட்டம் முழுவதும் 570 சிறப்பு முகாம்கள் மூலம் ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே தமிழகத்திலேயே ஒரு புதிய முயற்சியாக தடுப்பூசி போடுபவர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்து அதில் 22 பேருக்கு தங்க நாணயம் பரிசளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவித்துள்ளார். இந்த கவர்ச்சிகரமான அறிவிப்பு பொதுமக்களிடையே வரவேற்பை பெற்று உள்ள நிலையில் அதன் மூலம் தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

Updated On: 9 Oct 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமிக்கு சிறப்பு பேருந்துகள்!
  2. ஈரோடு
    பவானிசாகர் அணையில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே தெரிந்த கோயில்!
  3. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் தேவையில்லை : திகார் சிறை அறிக்கை
  4. லைஃப்ஸ்டைல்
    தக்காளி, வெங்காயம் இல்லாத காரமான சட்னி செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    உங்கள் இதய ஆரோக்கியத்துக்கு சாப்பிட வேண்டிய மீன்கள் என்னென்ன என்று...
  6. லைஃப்ஸ்டைல்
    "நம்பாதே யாரையும்" - மேற்கோள்களும் விளக்கமும்
  7. இந்தியா
    கடும் விமர்சனத்தைத் தூண்டிய தூர்தர்ஷனின் புதிய ஆரஞ்சு லோகோ
  8. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு, மறுவாக்குப்பதிவு இல்லை: தேர்தல்...
  9. தென்காசி
    சீரான குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் : போக்குவரத்து...
  10. தொழில்நுட்பம்
    கையில் அடங்கும் புதிய அதிசயம் - Vivo V30e